Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு
    வணிகம்

    சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு

    adminBy adminSeptember 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பாராட்டு தெரி​வித்​தார்.

    சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது ஆண்டு நிறைவு​ விழா சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு தலைமை விருந்​தின​ராக பங்​கேற்று தொடங்கி வைத்​து, வங்கியின் ஆண்​டு மலரை வெளி​யிட்​டார்.

    தொடர்ந்து விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நம்​நாட்​டின் வளர்ச்​சிக்கு வங்​கி​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன. வங்​கி​கள் பங்​களிப்பு நிதி பரிவர்த்தனையோடு மட்​டும் நிற்​காமல் பல்​வேறு வகை​களில் விரிவடைந்து வரு​கின்​றன.

    இதுத​விர நாட்​டின் நிலை​யான வளர்ச்​சிக்​கும் தூண்​டு​கோலாக உள்​ளன. வளர்ந்து வரும் இந்​தி​யா​வில் வங்கி வசதி​கள் குறை​வாக உள்ள ஊரகப் பகு​தி​களில்​தான் அதிக மக்​கள் வசிக்​கின்​றனர். சிட்டி யூனியன் வங்​கி​யின் 50 சதவீத கிளை​கள் ஊரகப்​ பகு​தி​களில் இருப்பது பாராட்டத்தக்கது. ஒருங்​கிணைந்த நிதி வளர்ச்​சிக்​காக பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. பிரதமரின் ஜன்​தன் யோஜனா திட்​டம் மூலம் 56 கோடி பேருக்கு வங்​கிக் கணக்கு தொடங்​கப்​பட்​டது. நேரடி நிதி​யுத​வி, மானி​யம் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் இடையூறு இன்றி பயனாளி​களுக்கு செல்​வதன் மூலம் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் வளர்ச்சி பெற்​றுள்​ளது.

    விவ​சா​யிகள் முன்​னேற்​றம், ஊரகப் பொருளா​தார மேம்​பாடு ஆகிய​வற்​றுக்​கு​தான் வங்​கி​கள் முன்​னுரிமை அளிக்க வேண்​டும். சரி​யான நேரத்தில் கடன், நிதி கையாள்​வது பற்றிய அறி​வு, விவ​சா​யம் குறித்த நவீன தொழில்​நுட்​பம் ஆகியவற்றை அளிப்​ப​தன் மூலம் வேளாண் தொழிலை நிலை​யான லாபம் மற்​றும் வளர்ச்​சிப் பாதைக்கு கொண்டு செல்லமுடி​யும்.

    அதே​போல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களும் பொருளா​தார வளர்ச்​சிக்கு மிக​வும் உதவு​கின்​றன. அந்த நிறு​வனங்​கள் வளர்ச்​சி​யின் இயந்​திர​மாக மாறு​வதற்கு வங்​கி​கள் உதவ வேண்​டும். பிரதமரின் சாலை​யோர வியா​பாரி​கள் நலத்​திட்​டம் மூலம் அவர்​களின் நிதி​ஆதா​ரம் மேம்பட்​டுள்​ளது. 2030 மார்ச் மாதம் வரை இந்த திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. முந்​தைய ஆண்​டு​களை போல் அல்​லாமல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் வங்கி சேவை​கள் இன்று ஊரகப் பகு​தி​களில் உள்ள சிறு விவ​சா​யிகள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு மிகுந்த பலனளிக்​கிறது. நமது வங்​கி​கள் பின்​தங்​கிய மற்​றும் புறக்​கணிக்​கப்​பட்ட மக்​களுக்கு சிறப்பு நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். விவசாயிகளுக்கு எளி​தாக கடன் கிடைக்க வழி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    விழா​வில், மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்கு தனி​யார் வங்​கி​கள் முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றன. இந்​திய அட்​ட​வணை வர்த்தக வங்​கி​கள், தங்​களின் சொத்து தரத்​தில் மிகப் பெரிய முன்​னேற்​றத்​தைப் பதிவு செய்​துள்​ளன. 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்​டில் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. 18 ஆண்​டு​களுக்கு பிறகு நீண்​ட​கால கடன் வளர்ச்சி சிறப்பாக உள்​ளது. கடந்த 8 ஆண்​டு​களில் இல்​லாத அளவில் பணவீக்க விகிதம் குறைந்​து, கடந்த ஜூலை​யில் 1.55 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. வருங்​கால வைப்பு நிதி​யகம்​(EPFO) ஜூன் மாதத்​தில் இது​வரை இல்​லாத அளவுக்கு சுமார் 22 லட்​சம் புதிய உறுப்​பினர்​களை சேர்த்​துள்​ளது.

    மக்களின் வாங்கும் திறன் உயர்வு: இதுத​விர, பொது​மக்​களின் வாங்​கும் திறன் 17 ஆண்​டு​களில் இல்​லாத மிக உயர்ந்த நிலையை எட்​டி​யுள்​ளது. இந்​தி​யா​வின் நிதி​நிலை தொடர்ந்து மேம்​பட்டு வரு​கிறது. வரு​வாய் பற்​றாக்​குறை 4.4 சதவீத​மாகக் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மத்​திய அரசின் நிதி கட்​டமைப்​பில் ஏற்​றத்​தாழ்வு ஏற்​பட்​டாலும், தொழிற்​சாலைகளின் வளர்ச்சி மற்​றும் வேலை​வாய்ப்​பு​கள் சிறப்​பாக உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த மாத இறு​திக்​குள் சீர்​திருத்​தம் செய்​யப்​பட்ட ஜிஎஸ்டி அறி​விப்​பு​கள் வெளி​யாகும். இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் இன்றும், நாளை​யும் ​(செப்​. 3, 4) நடை​பெற உள்​ளது. அதனடிப்​படை​யில் மக்​களுக்கு நேரடி​யாக கூடு​தல் சலுகைகள் கிடைக்​கும் வகை​யில் ஜிஎஸ்​டியில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​நிகழ்​வில் தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, சமூக நலத்​துறை அமைச்​சர் கீதா ஜீவன், சிட்டி யூனியன் வங்​கி​யின் மேலாண்மை இயக்​குநரும் தலைமை செயல் அதிகாரியுமான என்​.​காமகோடி, அலு​வல்சாரா தலை​வர் ஜி.ம​காலிங்​கம் மற்​றும் முக்​கிய பிர​முகர்​கள் பலர் கலந்​து​கொண்டனர்.

    முன்​ன​தாக 2 நாள் தமிழக சுற்​றுப்​பயணத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சென்​னைக்கு நேற்று வந்​தார். சென்னை வி​மான நிலை​யத்​தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் தாமோ அன்​பரசன், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், பொறுப்​பு டிஜிபி வெங்​கட்ராமன்​ உள்​ளிட்டோர் வரவேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டம் வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் வலியுறுத்தல்

    September 3, 2025
    வணிகம்

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!

    September 3, 2025
    வணிகம்

    உலக தென்னை தினம் | ‘ஏஎல்ஆர்-4’ புதிய ரகத்தை வெளியிட்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்!

    September 3, 2025
    வணிகம்

    தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.78,000-ஐ கடந்தது

    September 3, 2025
    வணிகம்

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம்

    September 3, 2025
    வணிகம்

    இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இதய ஆரோக்கியத்திலிருந்து நீரிழிவு ஆபத்து வரை: ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி கழுத்து அளவு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து
    • மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.