Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
    உலகம்

    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (செப்.1) ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். 2500 பேர் காயமடைந்துள்ளனர். நாங்கர்ஹர் பகுதியில் 12 பேர் உயிரிழந்தனர். 255 பேர் காயமடைந்தனர். எண்ணற்ற வீடுகள் தரைமட்டமாயின” என்றார்.

    ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், “ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ள கடுமையான பூகம்பத்தால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல் ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர். 63,000 பேர் வீடுகளை இழந்தனர். அதற்கு முன்னதாக ஜூன் 2022-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் உயிரிழந்தனர்.

    ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சிக்கல்கள் மிகுந்துள்ளன. தலிபான் ஆட்சியில் வெளிநாட்டு நிதிகள் குறைந்துள்ளன. மோசமான பொருளாதார நிலையால் கடுமையான நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் இன்னும் துயரம் தான்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நான் இந்தியாவைச் சேர்ந்தவன்: ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் மனிதன் நகர்த்தப்பட்டான்; அவர் தனது பழங்குடியினருக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 4, 2025
    உலகம்

    காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

    September 4, 2025
    உலகம்

    கோல்ட் பிளே கிஸ் கேம் நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி துப்பாக்கிச் சூடு: சிறந்த நிர்வாக வேலைகளை முடித்த பணியிட விவகாரங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 4, 2025
    உலகம்

    சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

    September 4, 2025
    உலகம்

    இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

    September 4, 2025
    உலகம்

    ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை
    • பிளாக்பிங்கின் லிசாவிலிருந்து கற்றுக்கொள்ள 5 அழகு பாடங்கள்
    • நாசா மற்றும் ஹப்பிள் ஐஆர்ஏஎஸ் 04302 ஐ வெளிப்படுத்துகின்றன, பட்டாம்பூச்சி நட்சத்திரம்: புதிய நட்சத்திரங்களும் கிரகங்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்வது | வீடியோவைப் பாருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழனிசாமி விமர்சனத்தால் மதுரை மேயருக்கு நெருக்கடி – மவுனம் கலைக்குமா திமுக தலைமை?
    • அய்ம்ஸ் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் கூறுகிறார், “உங்கள் சமையலறையில் குணப்படுத்துதல் தொடங்குகிறது”: 8 மூலிகைகள் குடல் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.