Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை
    வணிகம்

    உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை

    adminBy adminAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்களால், கோவையில் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இதில், குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் வாழைத்தார் ஏல மையத்துக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு, அங்கு குவியும் உள்ளூர் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநில மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிட்டு இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆனால், கடந்த மாதம் வீசிய கடுமையான சூறைக்காற்றால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

    முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால், வழக்கமாக ஓணம் பண்டிகை காலங்களில் வாழைத்தாருக்கு விலை கிடைக்கவில்லை. கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. நேந்திரன் வாழைத்தார் ஓணம் பண்டிகை காலத்தில் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகும். இந்நிலையில், தற்போது கிலோ ரூ.30 வரை ஏலம் போனது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாழை விவசாயிகள் கூறும்போது, ‘‘வழக்கமாக ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டு கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் இல்லாததால் நேந்திரன் வாழையின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகும் நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்’’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பை ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஈடுசெய்யும்: பிட்ச் நிறுவன ஆய்வில் தகவல்

    August 29, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே… எப்படி?

    August 28, 2025
    வணிகம்

    ட்ரம்ப் 50% வரி விதித்த ‘நிஜ’ காரணமும், இந்தியா செய்ய வேண்டியதும் என்ன? – ரகுராம் ராஜன் விவரிப்பு

    August 28, 2025
    வணிகம்

    சற்றே உயர்ந்த தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.9,405-க்கு விற்பனை

    August 28, 2025
    வணிகம்

    அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு

    August 28, 2025
    வணிகம்

    செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்?: சிஇஓ டிம் குக்கின் சூசக தகவல்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?
    • அமெரிக்க வரி விதிப்பை ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஈடுசெய்யும்: பிட்ச் நிறுவன ஆய்வில் தகவல்
    • இந்தியாவில் 5 நீளமான பாலங்கள் சாலைப் பயணத்திற்கு மதிப்புள்ளது
    • தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம்
    • கனமழை பாதிப்பு: லடாக்கில் சிக்கித் தவிக்கும் நடிகர் மாதவன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.