Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»”புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன்” – மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் பகிர்வு
    உலகம்

    ”புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன்” – மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் பகிர்வு

    adminBy adminAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன்” – மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார்.

    கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நியூராலிங்க் சிப் உதவியுடன் தனது அன்றாட வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உடல் அசைவில்லாமல் தன்னால் கணினி, ஏர் பியூரிபையர், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் உள்ள சமுதாய கல்லூரியில் தற்போது அவர் கல்வி பயின்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ல் நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தை அடுத்த அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது தோள்பட்டைக்கு கீழே உணர்வு மற்றும் இயக்கத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “அறுவை சிகிச்சைக்கு முன்பாக எனது இரவு பொழுதை முழுவதும் தூங்காமல் செலவிட்டேன். பகல் முழுவதும் தூங்குவேன். யாரையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் அப்படி இருந்தேன். உடல் அசைவின்றி இருந்த எனக்குள் ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் உயிர்ப்போடு இருந்தது.

    இப்போது அறுவை சிகிச்சைக்கு பின்பு என்னால் நிறைய விஷயங்களை சுயமாக செய்ய முடிகிறது. அதன் மூலம் எனது வாழ்வு முழுமை பெற்றுள்ளது. எனது பொழுதை அர்த்தமுள்ள வகையில் செலவிட முடிகிறது. இந்த சிகிச்சையை எதிர்கொண்ட முதல் நபர் என்பதில் எனக்கு பெருமை. ஏனெனில், இந்த முயற்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வி கண்டிருந்தால் அது என்னை போன்றவர்களுக்கு அடுத்த முறை நிச்சயம் உதவும் என்று நம்பினேன். மூளையில் எனக்கு சிப் பொருத்தியதும் அதை முழுமையாக என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. அது குறித்து நாங்கள் பொதுவெளியில் சொல்லவில்லை. நியூராலிங்க் குழுவினர் பின்னர் அதை சரி செய்தனர்.

    இப்போது என்னால் சுமார் 10 மணி நேரம் வரை கணினி உள்ளிட்ட சாதனத்தை பயன்படுத்த முடிகிறது. மரியோ கார்ட் கேம் விளையாடுகிறேன். தொழில் தொடங்கும் திட்டமும் உள்ளது. டெக்னிக்கலாக பார்த்தால் எனக்குள் சிப் பொருத்தப்பட்டுள்ளது. நான் Cyborg (எந்திரத்தின் உதவியால் ஆற்றல் பெற்ற மனிதர்) ஆக இருந்தாலும் இயல்பான மனிதரை போலவே உணர்கிறேன். இதோடு வாழ்வது வேடிக்கையானதும் கூட” என நோலண்ட் அர்பாக் தெரிவித்துள்ளார்.

    நியூராலிங்க்: நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.

    இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் சுமார் 5 ஆண்டுகாலம் மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்

    December 2, 2025
    உலகம்

    கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

    December 2, 2025
    உலகம்

    பாக். தலைவர்கள் ஆசிப் அலி, ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் தீபாவளிக்கு வாழ்த்து

    December 2, 2025
    உலகம்

    ‘எட்டு மாதங்களில் எட்டு போர்களை நான் நிறுத்தி உள்ளேன்’ – ட்ரம்ப் பேச்சு

    December 2, 2025
    உலகம்

    “சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

    December 2, 2025
    உலகம்

    வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் நவ.1-லிருந்து 155% வரி: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி
    • டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன்
    • நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்
    • ‘மை டியர் சிஸ்டர்’ படத்தில் அக்கா- தம்பி  ஈகோ
    • 2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்! –  பிரேமலதா நம்பிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.