Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»இந்திரா: திரை விமர்சனம்
    சினிமா

    இந்திரா: திரை விமர்சனம்

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திரா: திரை விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பணி ஒழுக்கமின்மையால், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா (வசந்த் ரவி). அவருடைய பகுதியில், ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அதாவது கொல்லப்பட்டவர்களின் மணிக்கட்டுத் துண்டிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்திராவின் மனைவி கயலும் (மெஹ்ரின் பிர்ஸாடா) அதே பாணியில் கொல்லப்படுகிறார். இதையடுத்து கொலைகாரன் யார் என்பதை அறிய களமிறங்குகிறார், இந்திரா. கொலைகாரன் யார்? ஏன் கொலைகளைச் செய்கிறார், மனைவியின் கொலைக்கு என்ன காரணம் என்பது கதை.

    இந்திரா என்கிற பெயரை வைத்து இது நாயகியை மையப்படுத்திய படம் என்று நினைத்துவிடக் கூடாது. நாயகனின் பெயர்தான் இந்திரா. போலீஸ் வேலையிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியுடன் நாயகன் இருப்பது போலத்தான் கதை தொடங்குகிறது. பிறகு சீரியல் கொலைகளுக்கு நகர்கிறது. இதுபோன்ற படங்களில் கொலையாளி யார் என்று தெரியாமல்தான் கதை நகரும். ஆனால், இதில் எடுத்த எடுப்பிலேயே கொலையாளி யார் என்பதை இயக்குநர் சபரீஷ் நந்தா சொல்லிவிடுகிறார்.

    நாயகனின் மனைவியும் கொலையான பிறகு, கதை சற்று சூடுபிடிக்கிறது. ஆனால், அந்தப் பரபரப்பு, அடுத்த சில காட்சிகளில் சைக்கோ கொலையாளி சிக்கியதும் அடங்கிவிடுகிறது. அதுவும் த்ரில்லர் படங்களுக்கே உரிய துரத்தல், நுண்ணறிவு எதுவும் இல்லாமல் சைக்கோ கொலையாளி போலீஸிடம் சிக்கிக் கொள்வது பரிதாபமாக இருக்கிறது.

    கொலையாளி சிக்கிய பிறகு அந்த இடத்தில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அடுத்து வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கத் தவறி விடுகின்றன. ஓர் இளம் பெண் சர்வ சாதாரணமாகக் காணாமல் போவதும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே, அந்நியர் ஒருவர் 3 மாதங்கள் இருப்பது போன்ற காட்சிகளை, நம்ப முடியவில்லை. அது படத்தை முடிப்பதற்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்கின்றன. நாயகனின் கதாபாத்திரம் தெளிவாகச் சித்தரிக்கப் படவில்லை. இந்தப் படத்

    துக்கு ஏன் சைக்கோ கொலையாளி தேவைப்பட்டார் என்பதை இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.

    படத்தின் நாயகன் வசந்த் ரவி, விரக்தி, ஆற்றாமை, கோபம், பயம், ஆக்ரோஷம் என வெரைட்டியாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்ஸாடா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். வளர்ந்து வரும் நாயகியான அனிகா சுரேந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம். சைக்கோ கொலையாளியாக வரும் சுனில் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் விரைப்பாக இருக்கிறார். துணைக் கதாபாத்திரங்களும் போதுமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

    த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையை சிறப்பாக வழங்கி இருக்கிறார் இசை அமைப்பாளர் அஜ்மல் தஹ்சின். பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவிலும், ரவீனின் படத்தொகுப்பிலும் குறையில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    விஷால் – ரவி அரசு இணையும் ‘மகுடம்’

    August 24, 2025
    சினிமா

    ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘தலைவன் தலைவி’

    August 24, 2025
    சினிமா

    கடலோர காதல் கதையை சொல்லும் ‘18 மைல்ஸ்’!

    August 24, 2025
    சினிமா

    திருவண்ணாமலை பின்னணியில் ஆன்மிக த்ரில்லர்!

    August 24, 2025
    சினிமா

    ஹாரர் பட 3-ம் பாகத்தில் தமன்னா!

    August 24, 2025
    சினிமா

    சிங்காவில் நடிக்கும் லாப்ரடார் வகை நாய்!

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற விவசாய சங்கங்கள் கோரிக்கை
    • இந்த 9 அன்றாட பொருட்களை உங்கள் குளிர்சாதன பெட்டி வாசலில் சேமிப்பதை நிறுத்துங்கள்; காரணம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு
    • ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் விஜய்யை கண்டித்து திமுகவினர் போஸ்டர்
    • இந்தியா அல்ல, ஆனால் இந்த நாடு உலகின் மிக உயரமான கணேஷா சிலைக்கு சொந்தமானது; அதன் பெயர் ‘டி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற எழுத்துடன் தொடங்குகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.