Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்
    தேசியம்

    தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்

    adminBy adminAugust 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    டெல்லி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சுமார் 8 லட்​சம் தெரு நாய்​கள் இருக்​கும் என்று பொதுநல அமைப்பு ஒன்று கணக்கிட்​டுள்​ளது. அவை அனைத்​துக்​கும் கருத்​தடை மற்​றும் தடுப்​பூசி போடு​வதற்கு அவ்​வளவு தொகையை ஒதுக்க முடி​யுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

    தெரு நாய்​களுக்கு கருத்​தடை செய்ய சுமார் ரூ.2,400 கோடி செல​வாகும் என்று கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இத்​துடன், தெரு நாய்​களை பிடிப்​பது, கருத்​தடை செய்​வதற்கு போது​மான கால்​நடை மருத்​து​வர்​கள், ஊழியர்​கள் தேவை​யும் உள்​ளன. கருத்​தடை செய்​வதற்கான தனி மையங்​கள் அமைக்க வேண்​டிய செல​வும் உள்​ளது. ரூ.2,400 கோடி என்​பது கருத்​தடை செய்​வதற்​கான செலவு மட்டும்​தான். தவிர கருத்​தடைக்கு பிறகு நாய்​களை பராமரிக்க வேண்​டிய செல​வும் உள்​ளது.

    இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள சிறு விலங்கு கால்​நடை சங்​கத்​தின் உறுப்​பினர் டாக்​டர் சிவம் படேல் கூறுகை​யில், ‘‘ஆண் நாய்​கள், பெண் நாய்​கள் என தனித் தனி​யாக கருத்​தடை செய்ய வேண்​டும். மேலும் ஆண் நாய், பெண் நாய்​களின் கருத்​தடைக்​கான செல​வு, குணப்​படுத்​துதலில் வேறு​பாடு​கள் உள்​ளன’’ என்​றார்.

    ஆண் நாய்​களுக்கு 4 மாதங்​கள் முதல் 1.5 வயது வரையி​லான காலமே கருத்​தடை செய்​வதற்​கு சிறந்​தது. எனினும், 1.5 ஆண்டுகளுக்​குப் பிறகும் கருத்​தடை செய்ய முடி​யும் எனக் கூறுகின்​றனர். மேலும், ஆண் நாய்​களுக்கு ரத்தப் பரிசோதனை, உயிரணுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்​று​வது, அறுவை சிகிச்​சைக்​குப் பிந்​தைய பராமரிப்பு என 3 கட்​டங்​களாக இதை அமல்படுத்த வேண்​டும்.

    இதற்கு 3 முதல் 5 நாட்​கள் வரை ஆகும். மேலும் ஒரு ஆண் நாய்க்கு ஆண்மை நீக்​கத்​துக்கு குறைந்​த​பட்​சம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செல​வாகும். 6 மாதங்​களுக்கு பிறகே பெண் நாய்​களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடி​யும். மேலும் ஆண் நாய்​களை விட கருத்​தடை செல​வும் அதி​க​மாகும். அவற்​றுக்கு குறைந்​தது ரூ.8,000 முதல் ரூ. 9,000 வரை செல​வாகும். இதனால் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை முழு​மை​யாக அமல்​படுத்​து​வ​தில்​ டெல்​லி அரசுக்​கு சிக்​கல்​ எழுந்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி

    August 23, 2025
    தேசியம்

    ‘நான் கொல்லப்பட்டால் கட்சியும், நீங்களும்தான் பொறுப்பு’ – அகிலேஷுக்கு பெண் எம்எல்ஏ கடிதம்

    August 23, 2025
    தேசியம்

    விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு

    August 23, 2025
    தேசியம்

    ஒடிசா: எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மோகன் சரண் மாஜி

    August 23, 2025
    தேசியம்

    இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை செப்.24 வரை நீட்டிப்பு

    August 23, 2025
    தேசியம்

    உத்தராகண்டில் மேக வெடிப்பு: இருவர் மாயம்; கடைகள், வாகனங்கள் கடும் சேதம்

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்
    • “பாலிவுட்டில் என்னை தொடர்ந்து புறக்கணித்தனர்” – இயக்குநர் அனுராக் காஷ்யப் வேதனை
    • மனித உரிமை மீறல் ஈடுபட்டதாக உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
    • வாய்வழி புற்றுநோயை என்ன ஏற்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய ஆபத்து காரணிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.