Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»“உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு
    விளையாட்டு

    “உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேட்சை விட்டபோதுதான் முதன்முதலாக ‘போதும் ஓய்வு பெற்றுவிடுவோம்’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தன என்று இந்திய அணியின் முன்னாள் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் மனம் திறந்துள்ளார்.

    ரவிச்சந்திரன் அஸ்வினுடனான ‘குட்டி ஸ்டோரீஸ்’ யூடியூப் ஷோவில் ஓர் உரையாடலில் இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறியது: “உங்கள் பந்தில்தான் கேட்சை விட்டேன் அஸ்வின். மேல்போர்னில் அதுவும் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கேட்சை விட்டேன். அது நான் வாழ்க்கையில் ஒருபோதும் விடக்கூடிய கேட்ச் அல்ல. மிகவும் சுலபமான ஒரு கேட்ச்.

    என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல விஷயங்களை மறந்து விடுவேன். ஆனால் கேட்ச்களை விட்டது மட்டும் தொடர்ந்து நினைவில் உள்ளது. அந்தக் கணம்தான் சரியானது என்று தெரிந்தது. அந்தத் தருணம்தான் போதும் வேறு வேலைகளைப் பார்ப்போம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்தத் தொடர் முடிந்தவுடனேயே எனக்குத் தெரியும்.

    ஆனாலும், நான் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க விரும்பவில்லை. இதுதான் என்னுடைய நிலை, இதுதான் என்னுடைய உணர்வு எனும் பட்சத்தில் அந்தக் கணத்தில் நான் யோசித்தது என்னவெனில், டெஸ்ட் கிரிக்கெட் இனி நமக்கு அவ்வளவுதான். சரி நாம் வீட்டுக்குத் திரும்பி இதைப் பற்றி ஆற அமர யோசிப்போம் என்று முடிவெடுத்தேன். அப்போது இது உணர்ச்சிகரமான முடிவல்ல, அது முடிவுதான் என்று தெளிவடைந்தேன்.

    எனவே, வீட்டுக்குப் போய் 2-3 வாரங்கள் குடும்பத்துடன் செலவிட்டேன். அப்போது முடிவெடுத்தேன்… இனி கிரிக்கெட் போதும், இனி போய் விளையாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவெடுத்தேன்.

    நிறைய இளம் வீரர்கள் வந்தவண்ணம் இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா நன்றாக வந்து கொண்டிருந்தனர். விராட்டுக்கு ஓர் அருமையான தொடராக அந்தத் தொடரே அமைந்தது. புஜாராவும் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தார். ரஹானே அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஒரு 4-5 வீரர்கள் சரியாக வந்து கொண்டிருந்தனர். இவர்கள்தான் அடுத்தத் தலைமுறை இந்திய வீரர்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

    என் காலம் முடிந்து விட்டது, முடிந்த வரை பங்களிப்பு செய்தோம். அணியை என்னால் இயன்ற அளவுக்கு முன்னுக்குக் கொண்டு வந்தேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இரண்டு தொடர்களிலும் 0-4 என்று தோல்வி கண்டது நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தியது. ஒரு சீனியர் வீரராக அணிக்காக பங்களிப்புச் செய்ய முடியவில்லையா, நகர்ந்து விட வேண்டியதுதான்” என்று ராகுல் திராவிட் கூறினார்.

    திராவிட் தன் கேப்டன்சியில் கிரெக் சாப்பல் பயிற்சிகாலத்தில் தொடர்ச்சியாக17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சேசிங்கில் வென்ற ஒரே அணி என்று இந்திய அணியின் உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்.

    2007 உலகக்கோப்பை சமயத்தில் கிரெக் சாப்பலும் இவரும் சேர்ந்து செய்யத் துணிந்த மாற்றங்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்குப் பிடித்தமானதாக இல்லை. அதன் விளைவு 2007 உலகக்கோப்பையில் திராவிட் பழி வாங்கப்பட்டு இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன?

    August 22, 2025
    விளையாட்டு

    ‘மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?’ – IND vs PAK போட்டி குறித்து மனோஜ் திவாரி கருத்து

    August 22, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? – மத்திய அமைச்சகம் விளக்கம்

    August 22, 2025
    விளையாட்டு

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அபினவ் ஷா

    August 22, 2025
    விளையாட்டு

    மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன?

    August 22, 2025
    விளையாட்டு

    400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் விஷால் சாதனை!

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரு மர சீப்பைப் பயன்படுத்துவதன் நன்மைகள்: முடி வீழ்ச்சி மற்றும் ஃப்ரிஸைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குமரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
    • உங்கள் பற்பசை நல்ல பாக்டீரியாவுக்கு தீங்கு விளைவிக்கிறதா? படிப்பு வாய்வழி அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன?
    • மீண்டும் இணையும் சிரஞ்சீவி – பாபி கூட்டணி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.