Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: நடந்தது என்ன?
    தேசியம்

    மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: நடந்தது என்ன?

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து முகாம்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர் தாக்கினார்.

    நடந்தது என்ன? – முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தச் சம்பவம் குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்டவர் முதல்வர் கையை வேகமாகப் பிடித்து இழுத்துள்ளார். அதில், அவரது தலையில் லேசாக அடிபட்டது. தாக்குதலில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் நலமுடன் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் திடீரென நடந்த சம்பவத்தால் முதல்வர் சற்றே அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறினர். நான் முதல்வரை நேரில் சந்தித்தேன். முதல்வர் ரேகா குப்தா ஒரு துணிச்சலான பெண்மணி. அவர் தனது மக்கள் குறை தீர் முகாமை தொடர்வதாக கூறியுள்ளார். மற்றபடி முதல்வர் கன்னத்தில் மர்ம நபர் அறைந்தார், முதல்வர் மீது கல் வீசப்பட்டது போன்ற தகவல்கள் எல்லாம் வெறும் சித்தரிப்பே” என்றார்.

    அவர் மீதான தாக்குதலுக்கு டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “இது மன்னிக்க முடியாத குற்றம். ஒரு பெண்ணாக, ஒரு மகளாக டெல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரும், அந்த தாக்குதல் பற்றி புனைவுக் கதைகளைக் கூறுவோரும் கோழைகளே.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, “முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், எதிர்ப்புக்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், முதல்வர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நம்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால்..? டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். “இது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எவ்வளவு கண்டிக்கப்பட்டாலும் அது குறைவாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஆனால் இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பின் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகிறது. டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பாக இல்லை என்றால், ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?” என அவர் வினவியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத 50,000 ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் நீக்கம்

    August 20, 2025
    தேசியம்

    மும்பையில் குறைந்தது மழையின் தீவிரம் – இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் மக்கள்

    August 20, 2025
    தேசியம்

    உ.பி.யில் மீன் வளர்ப்பால் அதிக பலன்: வாழையில் இருந்து மாறி முதலிடம் பெற்ற விவசாயி!

    August 20, 2025
    தேசியம்

    பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார் அமித் ஷா

    August 20, 2025
    தேசியம்

    ரூ.75,000 கோடி முதலீட்டில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

    August 20, 2025
    தேசியம்

    ‘மத்திய – மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் பாலமாக உள்ளார்கள்’ – உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாடு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” – நயினார் நாகேந்திரன்
    • பரினீட்டாவின் 20 ஆண்டு கொண்டாட்டத்தில் தந்தம் பனராசி சேலையில் ரேகா ஒரு கனவு போல் தெரிகிறது
    • ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத 50,000 ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் நீக்கம்
    • சஞ்சு சாம்சனை பலிகடா ஆக்கவா ஷுப்மன் கில்லுக்கு பொறுப்பு? – கிளர்ந்து எழும் சர்ச்சைகள்
    • தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் – மதுரையில் நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.