Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மோடியுடன் புதின் தொலைபேசியில் உரையாடல்: ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து விவரிப்பு
    தேசியம்

    மோடியுடன் புதின் தொலைபேசியில் உரையாடல்: ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து விவரிப்பு

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மோடியுடன் புதின் தொலைபேசியில் உரையாடல்: ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துகளை பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்து கொண்டார்.

    உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றும், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா – ரஷ்யா இடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்றும், பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த தொலைப்பேசி உரையாடலின்போது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார்.

    ஜெலன்ஸ்கியை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லை போரை தொடர்ந்து நடத்த அவர் விரும்பினால், அவர் போராடலாம். இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பாருங்கள்.

    நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியா ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை மாற்றமுடியும் என்று உக்ரைன் நினைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

    ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்தது போன்ற மாஸ்கோவுக்கான சலுகைகள் புதினை வலுப்படுத்தியுள்ளது. கிரிமியா இழப்பின் விளைவாக, அதன் பின்னர் இன்னும் சில கிழக்குப் பிராந்தியங்கள், அப்புறம் டான்பாஸை இழந்தோம். இவை புதுப்புதுத் தாக்குதல்களை எங்களை நோக்கி ஏவ புதினுக்கு புதிய உத்வேகம் தருகிறது.

    உக்ரைனுக்கு வாய் வார்த்தைகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பலிக்கவில்லை. நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். கூடவே, அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்திருக்கக் கூடாது. நாங்கள் இப்போது கீவ், ஒடேஸா, கார்கிவ் பகுதிகளும் அவ்வாறு ரஷ்யாவிடம் சென்றுவிடக் கூடாது என்றே போராடுகிறோம். நாங்கள் எங்களது சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

    August 18, 2025
    தேசியம்

    மும்பைக்கு ரெட் அலர்ட்: அவசர எண்கள் அறிவிப்பு; ஒடிசா, டெல்லி, இமாச்சலிலும் கனமழை

    August 18, 2025
    தேசியம்

    ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்

    August 18, 2025
    தேசியம்

    ‘முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்’ – சிபிஆர் பெயரின் சுவாரஸ்யப் பின்னணி!

    August 18, 2025
    தேசியம்

    இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது

    August 18, 2025
    தேசியம்

    ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹோட்டல் படுக்கைகளின் கீழ் மறைக்கப்பட்ட ஆபத்துகள்? விமான உதவியாளர் கட்டாயம் அறிய வேண்டிய ஹேக் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முடி வளர்ச்சி: இந்த யோகா போஸில் உட்கார்ந்திருக்கும்போது முடியை சீப்புவது முடி வளர்ச்சியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100+ கோடி வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’
    • பெண் சுகாதார தயாரிப்புகள்: பெண்பால் கழுவுதல் உண்மையில் வேலை செய்யுமா? யோனி பராமரிப்பு போக்குகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை மற்றும் அவை ஏன் ஆபத்தானவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.