Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

    பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அண்​மை​யில் நடை​பெற்​றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்​றுள்​ளனர். 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

    பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு இருக்​கிறது. இந்த வழக்​கில் ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், ‘‘பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன. அவர்​களின் பெயர்​கள் அடங்​கிய தனி பட்​டியலை வெளி​யிட வேண்​டும்’’ என்று கோரப்​பட்​டது. இதுகுறித்து விளக்​கம் அளிக்​கும்​படி தேர்​தல் ஆணை​யத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

    இதன்​படி தேர்​தல் ஆணை​யம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்டு இருக்​கிறது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது வரைவு வாக்​காளர் பட்​டியலில் பெயர் நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​கள், தேவை​யான ஆதா​ரங்​களு​டன் விண்​ணப்​பிக்​கலாம். உரிய விசா​ரணை, முறை​யான நோட்​டீஸ் வழங்​கப்​ப​டா​மல் யாருடைய பெயரும் பட்​டியலில் இருந்து நீக்​கப்​ப​டாது. பெயர் நீக்​கப்​பட்ட அனை​வருக்​கும் போதிய கால அவகாசம் வழங்​கப்​படும்.

    தேர்​தல் ஆணை​யத்​தின் தரப்​பில் 2.5 லட்​சம் தன்​னார்​வலர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் பிஹார் அரசு அலு​வலர்​கள் ஆவர். பிஹார் வாக்​காளர்​களுக்கு தேவை​யான உதவி​களை அவர்​கள் செய்து கொடுத்து வரு​கின்​றனர். பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி தொடர்​பாக நாளிதழ்​களில் 246-க்​கும் மேற்​பட்ட விளம்​பரங்​கள் வெளி​யிடப்​பட்டு உள்​ளன. அதோடு சமூக வலை​தளங்​கள் வாயி​லாக​வும் மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு தேர்​தல் ஆணை​யம் தெரிவித்துள்​ளது.

    இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் வரும் 12-ம் தேதி மீண்​டும் வி​சா​ரணைக்கு வரு​கிறது. அப்​போது உச்ச நீதி​மன்​றம் முக்​கிய உத்​தர​வு​களை பிறப்​பிக்​கலாம்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்

    August 11, 2025
    தேசியம்

    தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 11, 2025
    தேசியம்

    அணு ஆயுத தாக்குதல் குறித்த பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்

    August 11, 2025
    தேசியம்

    உ.பி.யில் போலி காவல் நிலையம் நடத்தி நன்கொடை வசூல் செய்த 6 பேர் கும்பல் கைது

    August 11, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

    August 11, 2025
    தேசியம்

    திருடப்பட்ட 5 லட்சம் செல்போன்களை மீட்க உதவிய செயலி

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்
    • தூய்மைப் பணியாளர்கள் உடன் பனையூரில் விஜய் சந்திப்பு – போராட்டத்துக்கு ஆதரவு
    • எந்த வேலை உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது? வேலையில் நிறைவேற்றுவது குறித்த ஒரு முக்கிய ஆய்வின் நுண்ணறிவு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முடிவுற்ற பணிகள், அடிக்கல் நாட்டிய பணிகள் என்னென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.