சிம்பு படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால் பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கடைசியாக சிம்பு படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “விரைவில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
தாணு தயாரிப்பில் உருவாகிறது வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி படம். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதில் கவுரவ கதாபாத்திரத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.