Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை

    adminBy adminAugust 11, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

    குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ல் ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

    இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. வரும் 21-ம் தேதிக்​குள் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். வரும் 22-ம் தேதி வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நடை​பெறும். வேட்​புமனுக்​களை திரும்​பப் பெற ஆக. 25-ம் தேதி கடைசி நாள் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

    இந்த சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் நரேந்​திர மோடி, பாஜக தலை​வர் ஜே.பி. நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. பாஜக தரப்​பில் குஜ​ராத் ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​விரத், கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், சிக்​கிம் ஆளுநர் ஓம் மாத்​தூர் மற்​றும் மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வரு​வ​தாகத் தெரி​கிறது. வரும் 13-ம் தேதி முதல் 20-ம்தேதிக்​குள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் அறிவிக்​கப்​படு​வார் என்று பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

    இந்​நிலை​யில், இண்​டியா கூட்​ட​ணி​யின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த 7-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற்​றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, தேசிய மாநாடு, பிடிபி, சிவசேனா (உத்​தவ் அணி), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத்பவார் அணி) உட்பட 25 கட்​சிகளின் தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் இண்​டியா கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வருக்​கான பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டது.

    இதுதொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கூட்​ட​ணி கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். அவர்​களின் விருப்​பங்​களை கேட்​டறிந்த பிறகு, ஒரு​மித்த கருத்​தின் அடிப்​படை​யில் பொது வேட்​பாளர் தேர்வு செய்​யப்​படு​வார்என்று தெரி​கிறது.

    தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகே, இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் முடிவு செய்​யப்​படு​வார் என்று காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக பாஜக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளர் நிறுத்​தப்​படு​வார். இது குறித்து பாஜக தலை​வர் நட்​டா, கூட்​டணிக் கட்சி தலை​வர்​களு​டன்பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறார்.

    எங்​கள் கூட்​ட​ணி​யின் வேட்​பாளரே குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். எனவே, வேட்​பாளர் விவ​காரத்​தில் மிகுந்த கவனம் செலுத்தி வரு​கிறோம். நாடாளு​மன்ற அனுபவம் இருக்க வேண்​டும். மாநிலங்​களவையை திறம்பட வழிநடத்த வேண்​டும் என்​ப​தால், பல்​வேறு மூத்த தலை​வர்​களின் பெயர்​களை பரிசீலனை செய்து வரு​கிறோம். குஜ​ராத், கர்​நாட​கா, சிக்​கிம், காஷ்மீர் மாநிலங்​களின் தற்​போதைய ஆளுநர்​கள் மற்​றும் பல்​வேறு முன்​னாள் ஆளுநர்​கள், நாடாளு​மன்ற அனுபவம்​மிக்க பாஜக மூத்த தலை​வர்​களின் பெயர்​கள் பரிசீலனை​யில் உள்​ளன. பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த சில பெண் தலை​வர்​களின் பெயர்​களும் பரிசீலிக்​கப்​படு​கின்​றன.

    தற்​போது பழங்​குடி​யினத்தை சேர்ந்த திர​வுபதி முர்மு குடியரசுத் தலை​வ​ராக பதவி வகிக்​கிறார். இதே​போல, குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​பாளர் தேர்​வும் ஆச்​சரி​யம் அளிக்​கும் வகை​யில் இருக்​கும். இவ்​வாறு பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

    வாக்​கெடுப்பு நடை​முறை என்ன? – மாநிலங்​களவை செய​லா​ளர் பி.சி. மோடி, குடியரசு துணைத் தலை​வர் பதவி தேர்​தலுக்​கான அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்டு உள்​ளார். இணைச் செய​லா​ளர் கரிமா ஜெயின், மாநிலங்​களவை செயலக இயக்​குநர் விஜய்​கு​மார் ஆகியோர் உதவி தேர்​தல் அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

    தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் வேட்​பாளர்​கள், அவர்​களிடம் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். இந்த தேர்​தலில் மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே வாக்​களிக்க முடி​யும். நாடாளு​மன்ற வளாகத்​தில் செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும். அன்​றைய தினமே முடிவு​கள் அறிவிக்​கப்​படும். மக்​களவை​யில் 543 எம்​.பி.க்​கள், மாநிலங்​களவை​யில் 233 எம்​.பி.க்​கள், 12 நியமன எம்​.பி.க்​கள் இடங்​கள் உள்​ளன. ஒட்​டுமொத்​த​மாக 788 எம்​.பி.க்​கள் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் வாக்​களிக்க தகுதி உடைய​வர்​கள்.

    தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 பேர் மட்​டுமே வாக்​களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவுதேவை. இதன்படி 391 எம்.​பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​கள், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களின் பலம் உள்​ளது. ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் வெற்றி பெறு​வது உறுதி என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உ.பி.யில் போலி காவல் நிலையம் நடத்தி நன்கொடை வசூல் செய்த 6 பேர் கும்பல் கைது

    August 11, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

    August 11, 2025
    தேசியம்

    திருடப்பட்ட 5 லட்சம் செல்போன்களை மீட்க உதவிய செயலி

    August 11, 2025
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

    August 11, 2025
    தேசியம்

    வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம் நிறுத்தம்: தமிழக அரசின் நிதி நெருக்கடியால் பல ஆண்டு திட்டம் ரத்து

    August 11, 2025
    தேசியம்

    1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்
    • ஒரு பெரிய சம்பளம் இல்லாமல், வெறும் 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்கள் எவ்வாறு 1.2 கோடியை உருவாக்க முடியும்- CA பகிர்கிறது உதவிக்குறிப்புகள்- டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உ.பி.யில் போலி காவல் நிலையம் நடத்தி நன்கொடை வசூல் செய்த 6 பேர் கும்பல் கைது
    • மகேஷ் பாபு படம் நிலை என்ன? – ராஜமவுலி அப்டேட்
    • பாமக யுத்தக் களம் – வெல்லப் போவது ராமதாஸா, அன்புமணியா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.