மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ் புடிஹால் 11 புள்ளிகள் குவித்து ஹீட் 2-ல் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். ஹீட் 7-ல் இந்தியாவின் கிஷோர் குமார் 10.14 புள்ளிகளை குவித்து 2-வது இடமும், ஹீட் 8-ல் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8.90 புள்ளி களை குவித்து 2-வது இடமும் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில், இந்தியாவின் பி.ஹரிஷ் ஹீட் 5-ல் 9.50 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் இந்தியாவின் தைன் அருண், பிரஹ்லாத் ராம் ஆகியோர் வெளியேறினர். 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவின் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) இந்தியாவின் ஆத்யா சிங், தமயந்தி ராம் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.