Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நெம்மேலி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
    மாநிலம்

    நெம்மேலி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நெம்மேலி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நெம்மேலி: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் கடல் அரிப்பு தொடரும் நிலையில், சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகியும் பணிகள் தொடங்கப்படாததால் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதி அருகே, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெம்மேலி மீனவர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடியிருப்புகளை கடல் நீர் உட்புகும் நிலை உள்ளது.

    மேலும், கடல் அரிப்பு காரணமாக கரை சேதமடைந்துள்ளதால் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக அங்கு நிறுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மீன்வளத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும், 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூட்டம் அமைக்கப்படும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், நெம்மேலி மீனவர் பகுதி செல்லும் சாலையில் கோரிக்கை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஜனார்தணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், தூண்டில் வளைவு அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; ரூ.4,874 கோடியில் திட்டங்கள் தொடக்கம்

    July 26, 2025
    மாநிலம்

    ஓரணியில் தமிழ்நாடு: திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    July 26, 2025
    மாநிலம்

    “அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” – தமிழிசை

    July 26, 2025
    மாநிலம்

    “உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்கே சொந்தமானவை” – அமைச்சர் எஸ்.ரகுபதி

    July 26, 2025
    மாநிலம்

    “பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    July 26, 2025
    மாநிலம்

    ராமதாஸின் எச்சரிக்கையை மீறிய அன்புமணியின் நடைபயணம் சட்ட விரோதமானது: பாமக

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; ரூ.4,874 கோடியில் திட்டங்கள் தொடக்கம்
    • விராட் கோஹ்லி முதல் ஹார்டிக் பாண்ட்யா: இந்திய கிரிக்கெட் வீரர்களால் ஈர்க்கப்பட்ட ஆண்களுக்கான சமீபத்திய ஹேர்கட்ஸ்
    • ஓரணியில் தமிழ்நாடு: திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
    • “நான் வார்த்தைகளால் நல்லவன் என்று நினைத்தேன்- என் 10 வயது வெளியே என்னைப் பேசும் வரை!” – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” – தமிழிசை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.