Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்
    தேசியம்

    கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஐஏஎஸ் அதி​காரி உட்பட 8 அரசு அதி​காரி​களின் வீடு​களில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதில் கணக்​கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ​ப‌ணம், தங்க நகைகள் மற்​றும் ஆவணங்கள் சிக்கின.

    கர்​நாடக மாநிலத்​தில் அரசு பணி​யில் உள்ள முக்​கிய அரசு அதி​காரி​கள் ஊழலில் ஈடு​படு​வ​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று பெங்​களூரு, மங்​களூரு, மைசூரு, துமக்​கூரு, குடகு, கொப்​பல், பெல​காவி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 8 அரசு அதி​காரி​களுக்கு சொந்​த​மான 45 இடங்​களில் சோதனை நடத்தினர்.

    நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்​தது. இந்த சோதனை​யில் 100-க்​கும் மேற்​பட்ட‌ போலீஸார் ஈடு​பட்​டனர். பெங்​களூரு நகர்ப்​புற ரயில்வே திட்​டத்​தின் சிறப்பு துணை ஆணை​யரும் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான வசந்தி அமருக்கு சொந்​த​மான ஆர்​.டி.நகர் வீட்​டில் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது அவர் கடந்த ஆண்டு தாச​நாரயணபுரா பகு​தி​யில் 10.2 ஏக்​கர் நிலத்தை வாங்​கிய ஆவணம் சிக்​கியது.

    இதுத​விர ரூ.12 லட்​சம் ரொக்​கம், 340 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த கைகடி​காரங்​கள், சொத்​துக்​களின் ஆவணங்​கள் உள்ளிட்​ட​வை​யும் சிக்​கின. இதையடுத்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் அவர் மீது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துக் குவித்ததாக வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

    குடகு மாவட்​டம் மடிக்​கேரி​யில் திறன் மேம்​பாட்டு தொழில்​முனை​வோர் மற்​றும் வாழ்​வா​தா​ரத் துறை​யின் இணை இயக்​குநர் மஞ்​சு​நாத​சாமி​யின் வீட்​டில் சோதனை நடத்​திய போது, கணக்​கில் வராத ரூ.16 லட்​சம் ரொக்​கம், 256 கிராம் தங்க நகைகள் சிக்கின. கொப்​பலில் மாவட்ட தொழில் மையத்​தின் உதவி இயக்​குநர் ஷேக் ஃபகத்​தின் வீட்​டில் சோதனை நடத்​திய போது 765 கிராம் தங்க நகைகள், ரூ.6 லட்​சம் ரொக்​கம், 16 விலை உயர்ந்த கைகடி​காரங்​கள், 330 அரிய நாண​யங்​கள் உள்​ளிட்​டவை சிக்​கின.

    இதுத​விர பெங்​களூரு சககார் நகரில் உள்ள நகர மற்​றும் கிராமப்​புற திட்​டத் துறை​யின் உதவி இயக்​குநர் எரப்பா ரெட்​டி, மைசூரு மாநகர அலு​வலக உதவி​யாளர் வெங்​கட​ராம், துமக்​கூரு​வில் கே.ஐ.ஏ.டி.பி.​யின் உதவி நிர்​வாகப் பொறி​யாளர் ராஜேஷ் உள்​ளிட்​டோரின் வீடு​களில் நடத்​திய சோதனை​யில் ரொக்க பணமும், சொத்து ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

    இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீ​ஸார் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘அரசு அதி​காரி​கள் 8 பேரின் வீடு​களில் நடத்​திய சோதனையில் ரூ.49.89 கோடி மதிப்​பிலான ரொக்​கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்​கள் சிக்​கி​யுள்​ளன. அந்த 8 அதி​காரி​கள் மீதும் பிஎன்​எஸ் சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.​



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

    July 26, 2025
    தேசியம்

    கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    July 26, 2025
    தேசியம்

    ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

    July 26, 2025
    தேசியம்

    பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

    July 26, 2025
    தேசியம்

    இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை: ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் தொடங்கி வைத்தார்

    July 26, 2025
    தேசியம்

    ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுநீரக சேதம் விளக்கப்பட்டுள்ளது: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகள் உங்கள் சிறுநீரகங்களுக்கு என்ன செய்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்
    • தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
    • கோல்ட் பிளே ஸ்டாரின் முன்னாள் க்வினெத் பேல்ட்ரோ வானியலாளரின் “செய்தித் தொடர்பாளர்” ஆகிறது: சமூக ஊடகங்கள் வெடிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.