Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!
    தேசியம்

    திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: ஜூன் 14 முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானம், பழுது நீக்கப்பட்டு இன்று (ஜூலை 22) அங்கிருந்து புறப்பட்டது.

    பிரிட்டிஷ் விமானப்படைக்கு சொந்தமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் விமானமான எப்- 35 ரக போர் விமானம், ஜூன் 14 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் இந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதால், அதனை பழுது நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.

    இதனால் பிரிட்​டிஷ் விமான பொறி​யாளர்​கள் குழு, ராயல் விமானப்​படை​யின் ஏர்​பஸ் ரக சரக்கு விமானத்​தில் எப்​-35 விமானத்தை பழுது பார்ப்​ப​தற்கு உபகரணங்​களு​டன் ஜூலை 6 அன்று திரு​வனந்​த​புரம் வந்​தடைந்​தனர். ரூ.924 கோடி மதிப்​பிலான இந்த விமானம், பழுது​பார்க்​கும் மையத்​துக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டு அதை சரிசெய்​யும் பணி​யில் பிரிட்​டிஷ் பொறி​யாளர்​கள் ஈடு​பட்டனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த பராமரிப்புப் பணிகளை முடித்த பொறியாளர்கள், பழுதுபார்க்கும் மையத்திலிருந்து விமானத்தை நேற்று வெளியே எடுத்தனர்.

    பிரிட்டிஷ் அதிகாரிகள் தாங்கள் மேற்கொண்ட பராமரிப்புப் பணிகளின் விவரங்களை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், பிரிட்டிஷ் விமானப்படை விமானம் இன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினுக்கு செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணமாக சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். விமானத்தின் அளவு, எடை, விமானம் தங்கியிருந்த நாட்கள் மற்றும் விமான நிலையத்தில் பணியாளர்கள் பயன்படுத்தும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.15,000- ரூ.20,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பழுது நீக்கும் மையத்துக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சொந்த ஊரில் கேதார்நாத் கோயில் கட்டும் அகிலேஷ்: உ.பி. தேர்தலை குறிவைத்து நடவடிக்கை

    July 23, 2025
    தேசியம்

    பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

    July 23, 2025
    தேசியம்

    எரிபொருள் சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

    July 23, 2025
    தேசியம்

    மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு

    July 23, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் 2-ம் நாளாக அமளி

    July 23, 2025
    தேசியம்

    இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங்

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சொந்த ஊரில் கேதார்நாத் கோயில் கட்டும் அகிலேஷ்: உ.பி. தேர்தலை குறிவைத்து நடவடிக்கை
    • காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா பகிர்வு
    • நெல்லை காந்திமதியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • மெட்ரோ பணி​யில் இருந்த ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து நெரிசல்
    • ஆமணக்கு எண்ணெய் மற்றும் குளிர் அழுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய்: முடி மீண்டும் வளர்வதற்கு எது சிறந்தது? – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.