Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மருத்துவ காரணங்களால் விலகுவதாக அறிவிப்பு
    தேசியம்

    குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மருத்துவ காரணங்களால் விலகுவதாக அறிவிப்பு

    adminBy adminJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மருத்துவ காரணங்களால் விலகுவதாக அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

    தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என்று ராஜினாமா கடிதத்தில் தன்கர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்

    September 13, 2025
    தேசியம்

    தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்

    September 13, 2025
    தேசியம்

    மோடி தாயாரின் ஏஐ வீடியோ: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

    September 13, 2025
    தேசியம்

    ‘நேபாள அமைதிக்கு இந்தியா உறுதுணை’ – சுசீலாவை வாழ்த்திய பிரதமர் மோடி உறுதி

    September 13, 2025
    தேசியம்

    அமெரிக்க வரிவிதிப்பு: மோகன் பாகவத் விமர்சனம்

    September 13, 2025
    தேசியம்

    கைதான 5 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வலதுசாரி தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் விசாரணையில் அம்பலம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சால்ட், பட்லர் அதிரடி ஆட்டம்: டி20 கிரிக்கெட்டில் 304 ரன்கள் குவித்த இங்கிலாந்து
    • பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
    • மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
    • பன்னீர் பக்க விளைவுகள்: இரத்த சர்க்கரையில் உயர்வு, எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அபாயங்கள் மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.