Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உ.பி.யில் இளம்பெண்களை மதம் மாற்றிய வழக்கில் கைதான ஜுங்கூர் பாபாவுக்கு ரூ.100 கோடி சொத்து: சொகுசு பங்களா இடிப்பு
    தேசியம்

    உ.பி.யில் இளம்பெண்களை மதம் மாற்றிய வழக்கில் கைதான ஜுங்கூர் பாபாவுக்கு ரூ.100 கோடி சொத்து: சொகுசு பங்களா இடிப்பு

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உ.பி.யில் இளம்பெண்களை மதம் மாற்றிய வழக்கில் கைதான ஜுங்கூர் பாபாவுக்கு ரூ.100 கோடி சொத்து: சொகுசு பங்களா இடிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்​டும் தாய் மதம் திரும்​பும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் மீண்​டும் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்​தியது. அப்​போது பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா என்​பவர் தங்​களை முஸ்​லிம் மதத்​துக்கு மாற்​றிய​தாக பலர் தெரி​வித்​தனர்.

    ஏற்​கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்​கூர் பாபா சிக்​கி, கடந்த நவம்​பர் 2024-ம் ஆண்டு தேடப்​பட்டு வந்​தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்​கூர் உள்​ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்​தது. கோமதி நகர் நிகழ்ச்​சிக்கு மறு​நாள் ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நண்​பர்​கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடந்த விசா​ரணை​யில் பல அதிர்ச்சி தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

    ஜுங்​கூர் பாபா கும்​பல், பல மாநிலங்​களில் இளம்​பெண்​களை மதம் மாற்​றம் செய்து வந்​துள்​ளது. மதம் மாறு​பவர்​களுக்கு பணம், வேலை, தொழில் உள்​ளிட்​ட​வற்றை வழங்​கு​வ​தாக ஆசை வார்த்​தைகள் கூறப்​பட்​டுள்​ளன. இந்த மதம் மாற்​றத்​துக்​காக இந்​துக்​களில் உள்ள சமூகத்​தினரை பொறுத்து பாபா கும்​பலுக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.20 லட்​சங்​கள் வரை கிடைத்​துள்​ளது.

    மேலும் ஜுங்​கூர் பாபாவுக்கு உ.பி.​யில் ஒரு கல்​லூரி மற்​றும் பல நகரங்​களில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்​துகள் இருப்​பதும் தெரிய வந்​துள்​ளது. இதையடுத்து அவரிடம் அமலாக்க துறை​யும் விசா​ரணையை தொடங்கி உள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களாக ஜுங்​கூர் பாபா மதம்மாற்ற வேலைகளில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். இவருடைய கும்​பலை சேர்ந்த பலரும் அரபு நாடு​களுக்கு பலமுறை சென்று வந்​துள்​ளனர்.

    அரபு நாடு​களில் இருந்து உ.பி.​யின் ஆஸம்​கர், முரா​தா​பாத், அவுரய்​யா, சித்​தார்த் நகர் உள்​ளிட்ட சில நகரங்​களை சேர்ந்​தவர்​கள் மூல​மாக​வும், இந்த பாபா கும்​பலுக்கு பணம் கிடைத்​துள்​ளது. இதுதொடர்​பாக 14 பேர் தேடப்​பட்டு வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வின் நெருங்​கிய தோழி நஸ்ரீனுக்கு உ.பி. பல்​ராம்​பூரின் மாதேபூர் கிராமத்​தில் அரசு நிலத்தை ஆக்​கிரமித்து சொகுசு பங்​களா கட்​டப்​பட்​டுள்​ளது. இதற்கு ஏற்​கெனவே நோட்​டீஸ்​ அளித்​து ​கால அவ​காசம்​ வழங்​கிய நிலை​யில்​ உ.பி. அரசு நேற்​று அந்​த பங்​களாவை புல்​டோச​ரால்​ இடித்​து தரைமட்​ட​மாக்​கியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நேபாள கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலா பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்

    September 12, 2025
    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை
    • நேபாள கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலா பயணிகள் 144 பேர் தாயகம் திரும்பினர்
    • கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்
    • ஆல்பா தலசீமியா என்றால் என்ன? இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
    • மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது – அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.