Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்? – மாநிலங்களவை எம்.பி.யாக அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு
    தேசியம்

    பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்? – மாநிலங்களவை எம்.பி.யாக அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு

    adminBy adminJune 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்? – மாநிலங்களவை எம்.பி.யாக அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க உள்ள நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாகிறது. இதனால், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    டிசம்பர் 2013-ல் டெல்லியில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக கேஜ்ரிவால் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அத்துடன் தான் போட்டியிட்ட தொகுதியிலும் தோல்வி அடைந்த கேஜ்ரிவால் இப்போது எந்தப் பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து டெல்லியின் முன்னாள் முதல்வரான கேஜ்ரிவால் கூறும்போது, ‘நான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக செல்ல விரும்பவில்லை. இப்பதவிக்கு யாரை அனுப்புவது என எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு முடிவு செய்யும்’’ என்றார்.

    இதன் பின்னணியில் டெல்லி மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த கேஜ்ரிவால் விரும்புவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன் பஞ்சாப்

    சார்பிலான மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அம்மாநில கட்சி பொறுப்பாளராக இருந்த ராகவ் சட்டா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பதவியை தற்போது மணிஷ் சிசோடியா வகிப்பதால் அவரது பெயரும் எம்.பி. பதவிக்கு பேசப்படுகிறது. முன்னாள் பத்திரிகையாளரான சிசோடியா, டெல்லியின் ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தவர்.

    இதுதவிர டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பெயரும் எம்.பி. பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது. இவரும் டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! – படக்குழு அறிவிப்பு
    • திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    • ஷெபாலி ஜாரிவாலா மரணம்: வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது? நிபுணர்கள் ஏன் அதற்கு எதிராக அறிவுறுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    • திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.