Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை
    மாநிலம்

    மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை

    adminBy adminJune 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

    காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக ஊரக உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது.

    தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அரசுக்கு சொந்தமான இடம் அல்லது கட்டிடத்தை குத்தகைக்கு வழங்க முடியும். ஒரே நபருக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கவோ, குத்தகைக் கால நீடிப்பு வழங்குவதோ கூடாது.

    பல்வேறு ஏழை வியாபாரிகள் தொழில் நடத்த வாடகைக் கடைகளை தேடும் சூழலில் மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல. அதேபோல் கடைகளை ஏற்கெனவே நடத்தி வருவோருக்கு குத்தகை நீட்டிப்பு வழங்குவதும் சட்டவிரோதம்.

    எனவே, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை சட்டவிரோதம் என அறிவித்தும், அந்த அரசாணை அடிப்படையில் ஏற்கெனவே உள்ள கடைகளின் குத்தகை உரிமத்தைப் புதுப்பிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

    September 8, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

    September 8, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

    September 8, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 4 நகரங்களில் பாஜக பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம்

    September 8, 2025
    மாநிலம்

    பழனிசாமியை ஆர்வமாக சந்திக்கும் வர்த்தகர்கள், தொழில் முனைவோர் – காரணம் என்ன?

    September 7, 2025
    மாநிலம்

    குறளிசைக் காவியம் படைத்த லிடியன் நாதஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு நாளுக்கு ரூ.522 சம்பளம்
    • தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 
    • பொது சிறுநீர் கழிப்பதை ஆட்சேபித்ததற்காக ஹரியானா மனிதன் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.