Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»பலாப் பழம் விலை கடும் வீழ்ச்சி – புதுக்கோட்டை விவசாயிகள் கவலை
    வணிகம்

    பலாப் பழம் விலை கடும் வீழ்ச்சி – புதுக்கோட்டை விவசாயிகள் கவலை

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பலாப் பழம் விலை கடும் வீழ்ச்சி – புதுக்கோட்டை விவசாயிகள் கவலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பலா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் பலா பழங்கள் அருகில் உள்ள மண்டிகள் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    வடகாடு பகுதி பலா பழம் ருசியாகவும், தித்திப்பாகவும் இருப்பதால், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான தனித்தன்மையை உலகெங்கும் பரவலாக்கும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் வடகாடு பகுதி பலா பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டிகளில் தற்போது பலாப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விலையோ கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வடகாடு பகுதி பலா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சேந்தன்குடி விவசாயி தங்க.கண்ணன் கூறியது: ஒரு கிலோ பலா பழம் ரூ.36-க்கு விற்பனை ஆகிய நிலையில், தற்போது ரூ.5-க்கும் குறைவாகவே விற்பனை ஆகிறது. சில மண்டிகளில் வேண்டா வெறுப்பாக பலா பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சிறிய அளவிலான பழங்களை வாங்கவே மறுக்கின்றனர். தோப்புகளிலும், கடைகளிலும் அழுகிய பழங்கள் அதிகம் உள்ளன. உள்ளூரில் விளைவிக்கப்படும் பலா பழத்துக்கு உரிய விலை கிடைக்காதது விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மேற்கு பருவமழையால்தான் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், அது தான் காரணமா?, அல்லது கூடுதல் லாபம் பெறுவதற்காக இதுபோன்ற காரணங்கள் வியாபாரிகளால் சொல்லப்படுகிறதா எனவும் சந்தேகம் எழுகிறது.

    எனவே, விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல, வெளிப்படைத் தன்மையோடு வணிகம் நடைபெற வேண்டும். விவசாயிகளின் விளைபொருள் கேட்பாரற்ற நிலைக்கு ஒதுக்கப்படுவது கவலைக்குரியது. பலா பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை இப்பகுதியில் நிறுவ வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டு வரும் இக்கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    இது குறித்து வேளாண் துறையினர் கூறியபோது, “பலா பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரும்பினால், அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம். அரசே பிரத்யேக தொழிற்சாலைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. புவிசார் குறியீடு பெறுவது ஆரம்ப கட்டத்திலேயேதான் உள்ளது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்
    • இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’
    • விபத்தில்லா நிலையை உருவாக்க வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.