Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»தமிழகத்தில் நலிவடைந்து வரும் ஜவுளித் தொழில் – என்னதான் காரணம்?
    வணிகம்

    தமிழகத்தில் நலிவடைந்து வரும் ஜவுளித் தொழில் – என்னதான் காரணம்?

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் நலிவடைந்து வரும் ஜவுளித் தொழில் – என்னதான் காரணம்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்தொழில் மத்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தமிழக ஜவுளித்தொழில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாகும். அதிக மக்களுக்கு குறிப்பாக கிராப்புற பெண்கள் அதிகம் ஜவுளித்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை பஞ்சுக்கு இறக்குமதி வரி 11 சதவீதம் நீக்குதல், செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை அகற்றுதல், இந்திய பருத்தி கழகத்தின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குதல் போன்ற மிக முக்கிய கோரிக்கைகளை பல ஆண்டுகளாக மத்திய அரசு நிறைவேற்றாததால் தொழில் மிகவும் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(சிஸ்பா) கெளரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 300 லட்சம் பேல்(ஒரு பேல் 356 கிலோ) பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 150 லட்சம் பேல் பஞ்சு இந்திய பருத்தி கழகத்தால் (சிசிஐ) கொள்முதல் செய்யப்பட்டு நூற்பாலை தொழில்துறையினருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 70 சதவீதம் தமிழ்நாடு கொள்முதல் செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ‘சிசிஐ’ கிளையை தமிழ்நாட்டில் தொடங்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    இன்று வரை தொடங்கப்படவில்லை. தமிழக அரசு ‘செஸ்’ வரி 1 சதவீதம் நீக்கினால் தமிழ்நாட்டில் தொடங்குவோம் என அறிவித்தனர். ஆனால் தமிழக அரசு 1 சதவீத செஸ் வரியை நீக்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை சிசிஐ கிளை தமிழ்நாட்டில் தொடங்கப்படவில் லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: பருத்தி, செயற்கை இழை முதல் ஆடை உற்பத்தி வரை நாட்டில் அதிக வேலை வாய்ப்பையும் அன்னிய செலாவணியையும் வரி வருவாயையும் அளித்து வருகிறது ஜவுளித்துறை. பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழைகள் இந்தியாவில் இரண்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டின் உள்ளன. இந்நிறுவனங்கள் பயன் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக்கட்டுப்பாடு என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    கார்ப்பரேட் துறையினரின் நலனுக்காக தொழில் கொள்கைகள் அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்படுவது சரியல்ல. செயற்கை இழை ‘QCO BIS’ இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக 18 முதல் 30 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையினர் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளித்தொழில் தள்ளாடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: பஞ்சுக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பிட்ட சில மாதங்களுக்காவது விலக்கு அளிக்க கோரியும் கண்டுகொள்வதில்லை. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடும் நெருக்கடியில் ஜவுளித் தொழில்: ‘ஆர்டிஎப்’ தலைவர் ஜெயபால் கூறும் போது, தமிழக ஜவுளித்தொழில் துறையினர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சரை நேரில் சந்திக்க உதவியதாகவும், அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தற்போது எந்த பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை என கோவையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ‘‘அவர் கூறுவது உண்மையில்லை. அவர் மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியையும் தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு பெற்றுத் தரவில்லை. நாங்கள் கடும் நெருக்கடியில் உள்ள போது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது, என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    வணிகம்

    தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

    June 27, 2025
    வணிகம்

    கால்நடைகளை எளிதாக விற்பனை செய்ய புதிய இணையதளம்

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
    • உணவு லேபிள்களைப் படிப்பது போதாது! இந்த அன்றாட பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன; ஏன் என்று தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ”ஜூலை 1 முதல் 3.16% கட்டணம் உயர்த்த மின்வாரியம்  முடிவு” – அன்புமணி குற்றச்சாட்டு
    • 5 ஸ்டைல் ​​பாடங்கள் சோஹ்ரான் மம்தானியிடமிருந்து நாம் முற்றிலும் திருடலாம் – இந்தியாவின் டைம்ஸ்
    • திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் – திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.