Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை செயல்படுத்துக: கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கோரிக்கை
    வணிகம்

    கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை செயல்படுத்துக: கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கோரிக்கை

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை செயல்படுத்துக: கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிருஷ்ணகிரியில் மாங்கூழ் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் அரசால் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மையிடத்தில் உள்ளது. இங்கு 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் மாங்கூழ் ஆலை நிர்வாகிகளின் சிண்டிகேட் அமைத்து உரிய விலையில் மாங்காய் கொள்முதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

    நிகழாண்டில்,மகசூல் அதிகரித்து விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாங்கூழ் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டு அரவை செய்யப்பட்ட மாங்கூழை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையால், மா கொள்முதல் கடந்த ஆண்டுகளை போல இல்லை.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு மாவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு அறிவித்த மாங்கூழ் பதப்படுத்தல் மற்றும் சந்தைப் படுத்தலுக்காக, ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சத்துணவில் மாங்கூழ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3.50 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 2 லட்சம் மெட்ரிக் டன் மா நுகர்வுக்கும், மாங்கூழாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1.50 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

    இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மா விவசாயிகளைக் காக்க கடந்த 2006-ல் ஆண்டு ரூ.150 கோடியில், ‘கிரிஷ்மா’ திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக ஆலப்பட்டியில் 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளில் ஒரே பெயரில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்துக்கு, ‘கிரிஷ்மா’ எனப் பெயரிடப்பட்டது.

    ஆனால், இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க , ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மா விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் நேரடியாகத் தலையீட்டுத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    வணிகம்

    ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

    June 29, 2025
    வணிகம்

    சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலையில் தொடரும் வீழ்ச்சி – இன்று பவுனுக்கு ரூ.440 குறைந்தது!

    June 28, 2025
    வணிகம்

    தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது

    June 28, 2025
    வணிகம்

    கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்
    • அரசு கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை: உயர்கல்வி துறை
    • ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு
    • ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்; விஜய் தமிழக முதல்வராவார்: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நம்பிக்கை
    • மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.