Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு
    மாநிலம்

    சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுகாதா​ரத்துறை அமைச்சர் மாற்றி பேசுகிறார்: சட்டப்போராட்ட குழு தலைவர் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு மருத்துவர்கள் கோரிக்கை பாதயாத்திரை நடத்தும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றி மாற்றி பேசுவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தரும் விவகாரத்தில், கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், மாநில அரசு நிவாரணம் தரவேண்டாம் என விதிமுறை உள்ளது.

    அதேபோல், கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தருவதற்கு, காத்திருப்போர் பட்டியல்படி தான் தர முடியும். பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், கருணை அடிப்படையில் வேலை என்பதில், இளநிலை உதவியாளர் பணிதான் தர முடியும். இருப்பினும் அது தனக்கு வேண்டாம் என தெரிவித்ததால் தான் இதுவரை தரவில்லை.

    அரசு மருத்துவர்கள் மட்டுமே பாதயாத்திரை போராட்டம் நடத்துகின்றனர். இதை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது, திவ்யா விவேகானந்தனுக்கு அடுத்த வாரமே நிவாரணத்துக்கான காசோலையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்ததை சிறப்பு நிகழ்வாக கருதி உடனடியாக அரசு வேலை தர வேண்டும். அதுவும் அவரது தகுதிக்கேற்ற அரசு வேலை தர வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார். ஆனால் தற்போது அமைச்சர் மாற்றி பேசுகிறார்.

    பொதுவாக கருணை அடிப்படையில் அரசு வேலை என்பது பணியின்போது இயற்கை மரணம் அடையும் நிலையில், அவரது வாரிசுக்கு அரசு வேலை தருவது. ஆனால் இங்கு பணியால், அரசு மருத்துவர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    அரசின் இத்தகைய மனப்போக்கு கரோனா பேரிடரின்போது, உயிரை பணயம் வைத்து பணியாற்றிய, ஒட்டுமொத்த மருத்துவர்களையும் வேதனைப்பட வைத்துள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவே பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் துறை நோட்டீஸ்

    June 28, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் – ஜூலை 1ல் தொடங்குகிறார் ஸ்டாலின்

    June 28, 2025
    மாநிலம்

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்

    June 28, 2025
    மாநிலம்

    அனைத்து நியாயவிலை கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர ஓபிஎஸ் வலியுறுத்தல்

    June 28, 2025
    மாநிலம்

    பருவமழை காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க 21 நீர்வழி கால்வாய்களில் ரூ.211.86 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர்

    June 28, 2025
    மாநிலம்

    சாலை பணிகளில் அலட்சியம் காட்டும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்ஜெட் விலையில் ஒப்போ K13x ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை
    • தீபாவளிக்கு வெளி​யாகிறது லெஜெண்ட் சரவணன் படம்
    • தமிழகத்தில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் துறை நோட்டீஸ்
    • ஜெஃப் பெசோஸ் வெட்ஸ் லாரன் சான்செஸ்: மணமகளின் திருமண உடை தயாரிக்க 900 மணிநேரம் ஆனது, இது முற்றிலும் தாடை -கைவிடுதல் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.