Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி
    மாநிலம்

    ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    கடந்த 45 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நான், கட்சி சிதறிப் போக வேண்டுமென்று கருதுவேனா? நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. ராமதாஸும், அன்புமணியும் விரைவாக சந்திக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம். இதற்காக இருவரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். கட்சியில் எந்தப் பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என்று தொடர்ந்து ராமதாஸிடம் வற்புறுத்தி வருகிறேன். சில ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது மிகவும் வேதனையளிக்கிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    தற்போது ஏற்பட்டுள்ள பிளவு சந்தர்ப்ப சூழலால் நேரிட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஊடகத்தினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அன்புமணி கோபமாக சொல்லிய வார்த்தைகளை பெரிதுபடுத்தக் கூடாது.

    ராமதாஸை அனைவரும் நேசிக்கின்றனர். அதேபோல, அரசியல் அதிகாரத்துக்கு அன்புமணி வர வேண்டும் என்பதும் அனைத்து தொண்டர்களின் விருப்பம். பாமக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ராமதாஸ், அன்புமணியிடம் கலந்து பேசுவோம். இதில் அவசரப்படத் தேவையில்லை. நான் அன்புமணியிடம் பேசியது குறித்து ராமதாஸிடம் தெரிவித்தேன். அது உங்கள் விருப்பம் என்று அவர் கூறிவிட்டார். சமாதான முயற்சி வெற்றியடைய வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

    மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: இதனிடையே, கடலூரில் 4 மாவட்டச் செயலாளர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் நகரத் தலைவர் முருகானந்தம் தலைமையிலான பாமகவினர், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    June 29, 2025
    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    “முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

    June 29, 2025
    மாநிலம்

    ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

    June 29, 2025
    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    June 29, 2025
    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்
    • ஸ்க்விட் கேம் சீசன் 3 முடிவடைந்ததால் நெட்ஃபிக்ஸ் அறைந்தது, கேட் பிளான்செட் டிடாக்ஜியை ஸ்க்விட் கேம் யுஎஸ்ஏ டீஸரில் விளையாடுகிறார்: ‘அமெரிக்காவில் கொரிய விளையாட்டு?’
    • 51-49 செனட் வாக்கு: ட்ரம்பின் ‘பெரிய அழகான’ மசோதாவுக்கு ‘இல்லை’ என்று கூறிய மூன்று குடியரசுக் கட்சியினர் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.