Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்
    மாநிலம்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்’ இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன. இந்த வழித்தடத்தில் அயனாவரம், ராயப்பேட்டை உட்பட பல இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன.

    இவற்றில் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணியில் `கல்வராயன்’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலைய சுற்றுச்சுவர் மற்றும் நிலைய கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரம்பூர் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், கல்வராயன் இயந்திரம் பெரம்பூர் நிலையத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. அயனாவரம் – பெரம்பூர் வரை 867 மீட்டர் சுரங்கப்பாதை பணியை முடித்துள்ளது. 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இப்பணியில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அயனாவரம் – பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டிய கல்வராயன் இயந்திரம், பெரம்பூர் ரயில் நிலையம், ரயில் பாதைகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும் எதிர்கொண்டு, மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது ஆலோசகர் மற்றும் டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர்

    July 12, 2025
    மாநிலம்

    யுனெஸ்கோ அங்கீகாரம்: செஞ்சிக் கோட்டை வரலாறு என்ன? – ஒரு தெளிவுப் பார்வை

    July 12, 2025
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?

    July 12, 2025
    மாநிலம்

    “கட்சிகளை உடைத்து மகிழ்வதே பாஜகவின் வேலை” – செல்வப்பெருந்தகை

    July 12, 2025
    மாநிலம்

    ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    July 12, 2025
    மாநிலம்

    பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை ‘சினிமா செட்டிங்’ திட்டம்: தமிழக பாஜக பட்டியலிடும் ‘பாதகங்கள்’

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர்
    • டெஸ்ட்டில் 5 நாளுமே 90 ஓவர்களையும் முழுமையாக வீசுங்கள்: மைக்கேல் வாகன் – ENG vs IND
    • யுனெஸ்கோ அங்கீகாரம்: செஞ்சிக் கோட்டை வரலாறு என்ன? – ஒரு தெளிவுப் பார்வை
    • கொரிய வயதான எதிர்ப்பு பானங்கள்: 5 பானங்கள் வயதை தாமதப்படுத்த கொரியர்கள் உட்கொள்கிறார்கள்
    • பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  – நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.