Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து: முதலில் விடைத்தாள் நகல் கோர அறிவுறுத்தல்
    கல்வி

    நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து: முதலில் விடைத்தாள் நகல் கோர அறிவுறுத்தல்

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து: முதலில் விடைத்தாள் நகல் கோர அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

    அதன்பின் பிளஸ் 2 தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-ல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்வர்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதை பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தேர்வுத் துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதையேற்று அந்த நடைமுறையை செயல்படுத்த தேர்வுத்துறைக்கு அனுமதி தரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கான விவரங்களை தேர்வுத் துறை வெளியிட்டது. அதில் மே 13 முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுதவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் ( மே 12-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் ஏஐ ஆங்கில ஆசிரியை ‘இனியா ஸ்ரீ’!

    July 9, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

    July 9, 2025
    கல்வி

    தொழில்நுட்ப யுகத்தில் பிரத்யேகப் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 12

    July 9, 2025
    கல்வி

    காம​ராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    July 9, 2025
    கல்வி

    பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    July 9, 2025
    கல்வி

    மைசூருவில் 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசளிப்பு!

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்த கோவை மக்கள்…” – அதிமுகவினருக்கு இபிஎஸ் மடல்
    • 95 வயதான ‘சூப்பரேஜர்’ தனது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்னால் 9 தினசரி பழக்கங்களை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி வேளாண்மை: சுபன்ஷு சுக்லா மெதி, மூங் ஆன் ஐ.எஸ்.எஸ்; இதை ‘உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான வேலை’ என்று அழைக்கிறது | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’
    • தமிழகத்தில் வெப்பநிலை 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 7 டிகிரி வரை உயர வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.