Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
    ஆன்மீகம்

    மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். 8-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 9-ம் நாளான புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயமும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து, 10-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.

    திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று அதிகாலை கோயிலை வந்தடைந்தனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடக்காடி வீதி – மேற்காடி வீதி சந்திப்பில் 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். பின்பு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 7.58 மணிக்கு மேடையில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8.04 மணியளவில் மேடையில் எழுந்தருளினார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர்

    திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜை, ஹோமத்துடன் திருக்கல்யாண நிகழ்வு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்குக் காப்பு கட்டப்பட்டது. காலை 8.43 மணியளவில் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் வைபவமும், தொடர்ந்து மாலை மாற்றும் வைபவமும் நடந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

    காலை 8.51-க்கு சுந்தரேசுவரரிடமிருந்து பெற்ற மங்கல நாணை மீனாட்சி அம்மனுக்கு சிவாச்சாரியார் அணிவிக்க திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுமங்கலிகள், தங்கள் திருமாங்கல்யக் கயிறை புதிதாக மாற்றிக் கொண்டு மனம் உருக வேண்டிக்கொண்டனர்.

    திருக்கல்யாண உற்சவம் முடிந்தவுடன் சுவாமியும், அம்மனும் காலை 9.35 மணிக்குப் புறப்பட்டு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    மணக்கோலத்தில் பக்தர்களுக்கு

    அருள்பாலித்த மீனாட்சி அம்மன்.

    தொடர்ந்து நேற்றிரவு யானை வாகனத்தில் சுவாமியும், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6.30 மணிக்கு அம்மனும், சுவாமியும் வலம் வரும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 12-ம் நாள் விழாவாக தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

    திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயில் மற்றும் சித்திரை, ஆவணி, மாசி வீதிகள் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தளிக்கப்பட்டது.

    திருக்கல்யாண விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    கள்ளழகர் நாளை புறப்படுகிறார்: இதற்கிடையே, சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் நாளை (சனி) மாலை மதுரைக்குப் புறப்படுகிறார். நாளை மறுதினம் (ஞாயிறு) மாலை மூன்றுமாவடி அருகே எதிர்சேவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பட்ட முகூர்த்தகால்

    December 1, 2025
    ஆன்மீகம்

    சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு

    December 1, 2025
    ஆன்மீகம்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    ஆண்டிபட்டி கோயில் திருவிழாவில் 105 கிடா வெட்டி ஆண்களுக்கு விடிய விடிய விருந்து

    December 1, 2025
    ஆன்மீகம்

    பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.  

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தோலில் தோன்றும் 4 முக்கிய கல்லீரல் பாதிப்பு எச்சரிக்கை அறிகுறிகள்
    • டிஜிட்டல் கைது மோசடியில் இரு முதியவர்கள் ரூ.1.1 கோடியை இழந்துள்ளனர் புனே செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
    • சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்
    • மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.