Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»பிரப்சிம்ரன் ஷாட்கள் கண்களுக்கு விருந்து: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு
    விளையாட்டு

    பிரப்சிம்ரன் ஷாட்கள் கண்களுக்கு விருந்து: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரப்சிம்ரன் ஷாட்கள் கண்களுக்கு விருந்து: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது.

    அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் 25 பந்துகளில், 54 ரன்களும் ஜோஷ் இங்லிஷ் 14 பந்துகளில், 30 ரன்களும் ஷசாங் சிங் 15 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். லக்னோ அணி சார்பில் திக்வேஷ் ராத்தி, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

    237 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 74, அப்துல் சமத் 45 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பஞ்சாப் அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “வெற்றிபெற்றது மகிழச்சி அளிக்கிறது. எல்லோரும் சரியான நேரத்தில் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அனைவரிடமிருந்தும் வெளிப்பட்ட பங்களிப்பு மகத்தானது. பிரப்சிம்ரன் விளையாடிய விதம் அபாரமானது. அவரது ஷாட்கள் கண்களுக்காக விருந்தாக அமைந்தது.

    இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனால் அது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் போட்டியை வெல்வதற்காகவே மைதானத்தில் காலடியெடுத்து வைக்கிறேன். இதுதான் எனது மனநிலை. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நபரும் தங்கள் பணியை துல்லியமாக அறிந்திருக்கிறார்கள், அதை,அவர்கள் செயல்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    நாம் சரிசெய்ய வேண்டிய ஒரே விஷயம் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை அறிந்து அதற்கு தகுந்தபடி நகர்ந்து செல்வதுதான். உங்களை நீங்களே ஆதரித்து, உள்ளுணர்வின்படி செயல்பட வேண்டும். புள்ளிவிவரங்கள் மற்றும் அது என்ன வழங்க முடியும் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். முடிவுகள் முக்கியம், அதுதான் வெற்றி” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK

    September 22, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டி20 சேசிங்கில் 8-0: சுவாரஸ்ய தகவல்

    September 22, 2025
    விளையாட்டு

    வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா – IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்

    September 22, 2025
    விளையாட்டு

    ஃபகர் ஜமானுக்கு தவறான அவுட், தரையில் பட்டு கேட்ச் – பாக். கேப்டன் வேதனை

    September 22, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க சூர்யகுமார் மீண்டும் மறுப்பு

    September 22, 2025
    விளையாட்டு

    சீனா பாட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு 2-வது இடம்!

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘டிரம்பின் எச் 1 பி விசா கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உண்மையான காரணம்…’: கூகிள் தலைமையகத்திற்கு வெளியே தனது புகைப்படத்திற்குப் பிறகு எச் -1 பி விசா கட்டண உயர்வுக்கு இணைய வரவு எம்பிஏ சாய் வாலாவை இணைய வரவு வைக்கிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK
    • திறமையான வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து பரிசீலனை?
    • எரிவாயு திட்டங்களில் அரசின் நிலைப்பாடு என்ன? – அக்.2-ல் உண்ணாவிரதம் அறிவித்தார் பிஆர் பாண்டியன்
    • துளசி நீர் நன்மைகள்: துளசி தண்ணீரை வைத்திருக்க 7 காரணங்கள் காலையில் முதல் விஷயம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.