Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்
    மாநிலம்

    79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரை நிகழ்த்த உள்ளார். இதையடுத்து, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில், 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீஸார் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகள், முக்கிய இடங்களில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்புப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு

    August 13, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.19 வரை மிதமான மழை வாய்ப்பு

    August 13, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும்” – எடப்பாடி பழனிசாமி

    August 13, 2025
    மாநிலம்

    விழுப்புரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

    August 13, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு: கணவர் கைதால் மதுரை மேயர் பதவி பறிக்கப்படுமா?

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
    • மனிதன் ஒரு சோடியம் இல்லாத உணவுக்காக AI க்கு திரும்புகிறான், சித்தப்பிரமை, மாயத்தோற்றம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் வியாதியுடன் முடிகிறான்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்
    • ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு
    • ஆப்டிகல் மாயை: 858 களில் மறைந்திருக்கும் ஸ்னீக்கி 828 ஐ வெளிக்கொணர உங்களுக்கு கூர்மையானது இருக்கிறதா ?? – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.