Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
    மாநிலம்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

    adminBy adminAugust 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம உதவி​யாளர். இவரது மகன் மோகன்​ராஜ்(16), திருவிக வீதி​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்​தார். பள்​ளி​யில் தின​மும் காலை 7 மணிக்கு நடை​பெறும் சிறப்பு வகுப்​பில் மாணவர் மோகன்​ராஜ் பங்​கேற்​றுள்​ளார்.

    இந்​நிலை​யில் நேற்று காலை வகுப்பு தொடங்​கு​வதற்கு முன்​பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்​ராஜ் மயங்கி கீழே விழுந்​தார். தகவலறிந்து பள்​ளிக்​குச் சென்ற தாயார் மகேஸ்​வரி, மகனை நேருஜி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் மாணவரைப் பரிசோ​தித்​த​போது, ரத்​தத்​தில் ஆக்​ஸிஜன் அளவு குறை​வாக இருப்​பது தெரியவந்தது.

    இதையடுத்​து, மேல் சிகிச்​சைக்​காக மற்​றொரு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர்.

    புத்தக சுமை அதிகம்… இதுகுறித்து மாணவரின் தாயார் மகேஸ்​வரி கூறும்​போது, “என் மகனுக்கு எந்த நோயும் இல்​லை. நன்​றாகப் படிக்​கும் மாணவன். 10-ம் பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வில் 452 மதிப்​பெண் பெற்​றுள்​ளான். தற்​போது அவன் கொண்டு செல்​லும் புத்​தகப் பையின் சுமை அதி​கம். இதை தூக்​கிக் கொண்டு 4 மாடிக்கு படிக்​கட்​டில் ஏறிச் சென்​ற​தால்​தான் பிரச்​சினை ஏற்பட்டுள்ளது” என்​றார்.

    இது தொடர்​பாக மகேஸ்​வரி அளித்த புகாரின் பேரில் விழுப்​புரம் நகர போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர். “பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு​தான், மாணவரின் மரணம் குறித்த முழுவிவரங்​கள் தெரிய​வரும்” என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

    பிளஸ் 1 வகுப்​புக்கு நடப்​பாண்​டிலேயே பொதுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்​டுள்ள நிலை​யில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்​களுக்கு சிறப்பு வகுப்பு நடத்​தப்​பட்​டுள்​ளதும்​, அதில்​ பங்​கேற்​ற மாணவர்​ உயி​ரிழந்​ததும்​ சர்​ச்​சையை ஏற்​படுத்​தி உள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

    August 14, 2025
    மாநிலம்

    விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை

    August 14, 2025
    மாநிலம்

    சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்

    August 14, 2025
    மாநிலம்

    திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு

    August 14, 2025
    மாநிலம்

    ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்த எளிய “செயல்” அறிவாற்றல் வீழ்ச்சியை 20%குறைக்கக்கூடும், நிபுணர்கள் வெளிப்படுத்துகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரம்: தேசியக்கொடி ஏற்றினார் அமித் ஷா
    • 10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
    • காமன்வெல்த் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஐஓஏ அனுமதி!
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.