Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு
    மாநிலம்

    மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

    adminBy adminAugust 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதி​காலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகு​திக்கு வந்து தரை​யிறங்​கியது.

    அப்​போது விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் உராய்ந்​து, வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​ததைப் பார்த்த ஓடு​பாதை பராமரிப்பு அதி​காரி​கள், டயர் உராய்ந்து தீப்​பிடிப்​ப​தற்​கான வாய்ப்​புள்​ள​தாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

    இத்​தகவல் விமான நிலைய தீயணைப்​புத் துறைக்​கும் சென்​றது. உடனே தீயணைப்​புத் துறை​யினர் அந்த சரக்கு விமானம் நின்ற பகு​திக்கு விரைந்து சென்​று, விமானத்தை முழு​மை​யாக சோதனை செய்​து, விமான டயர்​களை​யும் ஆய்வு செய்​தனர். ஆனால் விமானத்​தில் தீப்​பிடிப்​ப​தற்​கான அறிகுறி எது​வும் இல்லை என்று தெரி​வித்​து​விட்டு சென்​றனர்.

    விமானப் பொறி​யாளர்​கள் கூறுகை​யில், “வி​மானம் வந்து நின்​ற​போது, விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் அழுத்​த​மாக உராய்ந்து கொண்டு ஓடிய​தால் புகை எழும்​பி​யுள்​ளது. வழக்​க​மாக நீண்ட தூர விமானங்​கள் மற்​றும் சரக்கு விமானங்​கள் வந்து தரை​யிறங்​கும் போது, அது​போல் ஏற்​படு​வது வழக்​கம்” என்​றனர்.

    விமான பாது​காப்பு அதி​காரி​கள் சரக்கு விமானத்தை முழு​மை​யாக ஆய்வு செய்​து, விமானம் முழு பாது​காப்​புடன் உள்​ள​தாகத் தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில், சென்னை விமான நிலை​யத்​தில் சரக்கு விமானம் தீப்​பிடித்​த​தாக​வும், அந்த தீயை தீயணைப்பு வீரர்​கள் வந்து அணைத்​த​தாக​வும் தவறான தகவல் பரவிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த தவறான தகவல் எப்​படிப் பரவியது என்​பது குறித்து அதி​காரி​கள்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    August 14, 2025
    மாநிலம்

    நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    August 14, 2025
    மாநிலம்

    12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

    August 14, 2025
    மாநிலம்

    ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு
    • வேர் கால்வாய் சிகிச்சையானது மார்பக புற்றுநோயை ஏற்படுத்த முடியுமா? தெரிந்து கொள்ள 5 உண்மைகள்
    • மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி
    • எல்லா நேரத்திலும் புகார்? இது ஏன் மூளைக்கு மோசமானது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை நரம்பியல் விஞ்ஞானி விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.