Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
    மாநிலம்

    பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா திருவிடந்தை நித்தியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பி்ல் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ‘‘சி்த்ரா பவுர்ணமி நாளில் பாமக நடத்தும் இந்த மாநாட்டின் காரணமாக கோயி்ல்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ எனவும் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், ‘மாநாடு நடைபெறும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காண்பித்தார்.

    அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘இந்த மாநாட்டுக்கு 47 கடும் நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

    பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ‘‘காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்’’ என உறுதியளித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘பாமகவின் இந்த மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என பாமக தரப்பில் வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாநாட்டுக்கு வருகை தருவோர் எவ்வித ஆயுதங்களையும் எடுத்துவரக்கூடாது.

    முன்அனுமதி பெற்ற வாகனங்களையே போலீஸார் அனுமதிக்க வேண்டும். எந்தவொரு சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காத வகையில் கூடுதல் போலீஸாரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாமகவின் இந்த மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியான முறையில் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம்’’, என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    மற்றொரு வழக்கும் தள்ளுபடி: இதேபோல பாமகவின் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டுக்கு தடை கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவரான பொன்னுரங்கம் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ‘‘கடந்த 2013-ம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய சித்திரை முழுநிலவு பெருவிழாவின்போது மரக்காணத்தில் சாதிக்கலவரம் ஏற்பட்டு பட்டியலின மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

    அந்த கலவரத்தில் 4 பேர் இறந்தனர். அதன்பிறகு சித்திரை முழுநிலவு கூட்டத்துக்கு அரசு அனுமதி வழங்குவதில்லை. இந்நிலையில் தற்போது நடைபெறும் பாமக மாநாடு காரணமாக வடநெமிலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் பொது அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளதால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி எல். விக்டோரியா கவுரி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், ‘‘பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

    அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘ஏற்கெனவே இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தடை கோரிய மனுவை ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    July 1, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புற்றுநோய்: முழுமையான இருளில் தூங்குவது: புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க இது எவ்வாறு உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!
    • 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்
    • இந்த மாலை உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அல்சைமர் ஆபத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.