Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு
    மாநிலம்

    பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர். எதிரிகளை முறியடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ”இந்திய நாட்டை சிறந்த வல்லரசாக ஆக்க வேண்டும் என்று பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நம் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள் என்றால் அது ராஜீவ் காந்தியின் சாதனை. இதையெல்லாம் மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இது தேர்தலின் முதல்கட்ட பணி. எந்தொரு கருத்து வேறுபாடும் இல்லாமல் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.

    புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாநிலத்தை ஆளும் முதல்வர் ரங்கசாமி, பாஜக ஆகியோர் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை. பொய் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் செய்த பிரச்சாரத்தில் எதுவும் நடைபெறவில்லை. இப்போது மக்கள் அவர்களை வெறுத்துள்ளனர்.

    அதன் வெளிப்பாடு தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்து. அதேபோல் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் காங்கிரஸ் காரர்கள் தலை நிமிர்ந்து தெருவில் நடமாட முடியும்.

    அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகம் திறந்திருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியை பழி வாங்க வேண்டும் என்று கங்கனம்கட்டி கொண்டு செயல்படுகிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்.

    இவர்களை முறியடிக்க வேண்டும். முறியடிக்கின்ற சக்தி தொண்டர்கள் கையில் உள்ளது. நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ்கார்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். அதனை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல்

    September 12, 2025
    மாநிலம்

    கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை

    September 12, 2025
    மாநிலம்

    காங். எம்எல்ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்

    September 12, 2025
    மாநிலம்

    “தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகளை எதிர்கொள்கிறது தவெக” – விஜய் ஆவேசம்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு வாரமும் உங்கள் துண்டுகளை கழுவுவது தவறு! இங்கே நீங்கள் அவற்றை எவ்வளவு அடிக்கடி கழுவ வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை
    • அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
    • வழுக்கை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இடையே ஒரு தொடர்பு உள்ளதா?
    • கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு செப்.22-ல் புதிதாக தொடங்கும்: சித்தராமையா அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.