Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராவை அகற்ற அர்ச்சகர்கள் வலியுறுத்தல்
    மாநிலம்

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராவை அகற்ற அர்ச்சகர்கள் வலியுறுத்தல்

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராவை அகற்ற அர்ச்சகர்கள் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாமக்கல்: அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் நேற்று சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத் துறையினர் பொருத்தினர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பொருந்திய கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதற்கு கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் மாதம் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி கோயிலைச் சுற்றி வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இச்சூழலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் காவல் துறை யினர் பாதுகாப்புடன் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அர்ச்சகர்களை வெளியேற்றிய அதிகாரிகள் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தினர். எனினும், அதை அகற்ற வேண்டும் என அர்ச்சகர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலை பொறுத்தவரை ஸ்தானீக பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக பூஜைகளை செய்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில் ஒரு மனுதாரர் கேட்டுக் கொண்டதையடுத்து கோயில் கருவறையில் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாப்பதாகக் கூறி அர்த்த மண்டபத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    கருவறையில் உள்ள சுவாமியை படம் பிடிக்கும் வகையில் இது பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கூட மகா மண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில்லை, பொருத்தப்படவும் இல்லை.

    ஆனால் திருச்செங்கோடு மலைக் கோயிலில் மட்டும் ஆகம விதிகளை மீறி அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத்துறையினர் பொருத்தியுள்ளனர். இது எங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயலாகும். அர்த்த மண்டபம், கருவறையை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் சிசிடிவி கேமரா பொருத்தலாம். எங்களை வெளியேற்றிவிட்டு சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். இனி பக்தர்கள் தான் ஆகம விதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயில் ஆகம விதிகளுக்கு முரணாக எந்த செயலும் நடத்தப்படவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது. மூலவர் திருவுருவம் தெரியாதபடி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும், கருவறையின் வாசல் மட்டுமே வெளியே தெரியும். யார் என்ன எடுத்துச் செல்கிறார்கள், கொண்டு வருகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்களிடம் பேசியபோதும் ஒத்துழைக்க மறுக்கின்றனர், என்றனர்.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கேமரா பொருத்தப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

    September 12, 2025
    மாநிலம்

    சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

    September 12, 2025
    மாநிலம்

    தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!

    September 12, 2025
    மாநிலம்

    அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    • அமெரிக்காவில் இறப்புக்கான சிறந்த 10 காரணங்கள்: புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் உள்ளன
    • அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து
    • உங்கள் பால்கனி புறா இல்லாத முறைகளை காயப்படுத்தாத முறைகள் இல்லாமல் வைத்திருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.