Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்
    மாநிலம்

    சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு). கார்த்திகேயன் (போக்குவரத்து). பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில் 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள். பேருந்து முனையங்கள். பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்கள். வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை முழுவதும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல, தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ரயில் நிலையங்களில்…. சென்னை. திருச்சி ஆகிய 2 ரயில்வே காவல் மாவட்டங்களிலும் உள்ள ரயில் நிலையங்களில் 1,300 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களும் (ஆர்பிஎஃப்) இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர். திருவள்ளூர், காட்பாடி, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூல மாகவும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

    ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நிலையில், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்து வருகின்றன.

    கடந்த ஜன. 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி நாளை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    August 14, 2025
    மாநிலம்

    மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

    August 14, 2025
    மாநிலம்

    12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

    August 14, 2025
    மாநிலம்

    ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி
    • மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு
    • ஆரோக்கியமான சமையல் அரிசி: ஸ்டார்ச் குறைக்கவும் அதிகபட்ச ஊட்டச்சத்தை தக்கவைக்கவும் அரிசியை சமைப்பதற்கான சரியான வழி என்ன?
    • 12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
    • ஒரே இரவில் பருக்களை அகற்றுவது எப்படி: தெளிவான சருமத்திற்கான வேகமான மற்றும் இயற்கை வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.