சென்னை: சென்னை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்படுகிறது. அன்று மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள் என அனைத்தும் ஆக.15-ல் மூடப்பட வேண்டும்.
அறிவிப்பை மீறி மது விற்பனை செய்தால், மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.