Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, October 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»குறைவான கூலி, கடுமையான வேலை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கொடுமைக்கு தீர்வு கோரும் சிபிஎம்
    மாநிலம்

    குறைவான கூலி, கடுமையான வேலை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கொடுமைக்கு தீர்வு கோரும் சிபிஎம்

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குறைவான கூலி, கடுமையான வேலை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கொடுமைக்கு தீர்வு கோரும் சிபிஎம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் பகுதியில் அமைந்துள்ள 2 X 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த தொழிற்சாலையில் அடுத்தடுத்து கட்டுமானப் பணிகளின் போது விபத்து நடைபெறுவதும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மரணத்தை எதிர்கொள்வதும் அதிகரித்துள்ளது.

    கடந்த இரண்டு மாதத்தில் மீஞ்சூர் பகுதியில் நடந்த இரண்டாவது விபத்தாகும் இது. கடந்த விபத்தின் போது ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். தற்போது 150 அடி உயரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் சாரம் சரிந்து 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியமும், ஒப்பந்தம் எடுத்த பெல் நிறுவனமும் இணைந்து மேற்கொண் டிருக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

    குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு, வேலை நேரம், சட்டப்படியான கூலி உள்ளிட்டவைகள் வழங்கு வதையும், குறிப்பாக, புலம் பெயர் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். மனித உழைப்பை, உயிரை மதிக்காத நிறுவனங்களுக்கான ஒப்பந்த உரிமைகளை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சமும், மத்திய அரசு ரூ.2 லட்சமும் நிவாரணம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 30 வயது மதிக்கதக்க இளைஞர்கள் என்பதால் ஒப்பந்தம் எடுத்துள்ள பெல் நிறுவனத்திடம் இருந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடும், படுகாயமுற்று சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சையும், பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடும் வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” – திருமாவளவன்

    October 2, 2025
    மாநிலம்

    பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

    October 2, 2025
    மாநிலம்

    “விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” – சீமான்

    October 2, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

    October 2, 2025
    மாநிலம்

    ‘கரூர் சம்பவத்தில் சில கட்சிகள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன’ – செல்வப் பெருந்தகை

    October 2, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டு அருகே கடலில் மூழ்கி 3 பேர் பலி: முதல்வர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    October 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” – திருமாவளவன்
    • ஊறவைத்த பாதாம் மற்றும் ஊறவைத்த அக்ரூட் பருப்புகள்: எந்த நட்டு ஆரோக்கியமானது, ஏன்
    • பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
    • காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது!- பவுன் ரூ.88,000-ஐ நெருங்கியது
    • இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக நடைபயிற்சி தவிர வேறு 7 சிறந்த பயிற்சிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.