Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு
    மாநிலம்

    கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.

    மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த தனி நீதிப​தி, தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​ற​வும், கொடிக் கம்​பங்​கள் வைப்​ப​தாக இருந்​தால் அரசிடம் அனு​மதி பெற்று பட்டா இடங்​களில் வைக்​க​வும் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது.

    இந்த உத்​தரவை அடுத்து தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வருவாய்த் துறை, உள்​ளாட்சி அமைப்​பு​கள் நடவடிக்கை மேற்​கொண்​டன.

    இந்​நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​று​வ​தில் இருந்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு விலக்கு அளிக்​கக் கோரி அக்கட்சியின் பொதுச் செய​லா​ளர் சண்​முகம் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்த 2 நீதிப​தி​கள் அமர்​வு, விசா​ரணையை 3 நீதிப​தி​கள் அமர்​வுக்கு மாற்​றியது.

    இந்த மனுவை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், எஸ்​.சவுந்​தர் அமர்வு விசா​ரித்து, “அனைத்து கொடிக் கம்பங்களை​யும் ஒரே இடத்​தில் நிறு​வலாம். இது தொடர்​பாக கட்​சிகள், அமைப்​பு​கள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்யலாம்.

    அது​வரை கொடிக் கம்​பங்​களை அகற்​றும் விவ​காரத்​தில் தற்​போதைய நிலை தொடர வேண்​டும்” என்று உத்​தர​விட்​டது. இதையடுத்​து, திமுக, அதி​முக, மதி​முக, திக, விடு​தலை சிறுத்​தைகள், தவெக, இந்​திய கம்​யூனிஸ்ட், மக்​கள் வாழ்​வுரிமை கட்சி உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

    இந்த மனுக்​கள் விசா​ரணை நிலு​வை​யில் இருந்த நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​றும் சென்னை உயர் நீதி​மன்ற உத்தரவை எதிர்த்து கதிர​வன் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

    இந்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது, அரசு தரப்​பில் “19 மாவட்​டங்​களில் பொது இடங்​களில் அனு​ம​தி​யில்​லாமல் வைக்​கப்​பட்​டிருந்த 100 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகற்றப்​பட்​டுள்​ளன. 10-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களில் 90 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் 31 சதவீத கொடிக்​கம்​பங்​கள் அகறப்​பட்​டுள்​ளன” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

    இதையடுத்து நீதிப​தி​கள், “உயர் நீதி​மன்​றம் அனைத்து தரப்​பை​யும் முழு​மை​யாக ஆராய்ந்​து​தான் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. அரசுக்​குச் சொந்​த​மான இடத்தை அரசி​யல் லாபத்​துக்​காக அரசி​யல் கட்​சிகள் பயன்​படுத்​து​வதை பார்த்​துக் கொண்​டிருக்க முடியாது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்.

    இந்​நிலை​யில், கொடிக் கம்​பம் வழக்​கின் மேல்​முறை​யீடு மனு மீதான விசா​ரணை நீதிபதி சுப்​பிரமணி​யம் தலை​மையி​லான மதுரை உயர்​நீ​தி​மன்ற 3 நீதிப​தி​கள் அமர்​வில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர் நீதிப​தி​கள், “கொடிக் கம்​பம் தொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்​துள்​ளது.

    எனவே, இந்த மேல்​முறை​யீட்டு மனு மீது இந்த அமர்வு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது. தேவையெனில் மனு​தா​ரர்​கள் உச்ச நீதி​மன்​றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். மேல்​முறை​யீட்டு மனுக்​கள் முடித்து வைக்​கப்​படு​கின்​றன” என்று உத்தரவிட்டனர். இந்த உத்​தர​வையடுத்து தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

    September 10, 2025
    மாநிலம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

    September 10, 2025
    மாநிலம்

    நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி

    September 10, 2025
    மாநிலம்

    செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்

    September 10, 2025
    மாநிலம்

    உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.ஐ – காவல் ஆணையர் அழைத்து பாராட்டு

    September 10, 2025
    மாநிலம்

    காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ
    • சசி – விஜய் ஆண்டனி இணையும் ‘நூறுசாமி’
    • பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்
    • எடை இழப்புக்கு மதிய உணவுக்கு முன் பின்பற்ற வேண்டிய 7 பழக்கம்: பசியைக் கட்டுப்படுத்தவும் எடை நிர்வாகத்தை அதிகரிக்கவும் உதவிக்குறிப்புகள் – இந்தியாவின் டைம்ஸ்
    • ‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.