Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    மாநிலம்

    ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

    திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழையும் பெய்தது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று மழையின் தீவிரம் குறைந்தது.

    இன்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் 16 மி.மீ., ஊத்து பகுதியில் 12 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 9.40 மி.மீ., காக்காச்சி பகுதியில் 7 மி.மீ., மாஞ்சோலையில் 4 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ., பாபநாசம், நாங்குநேரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

    பாபநாசம் அணைக்கு விநாடிககு 1,719 கனஅடி நீர் வந்தது. 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2.65 அடி உயர்ந்து 121.15 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 181 கனஅடி நீர் வந்தது. 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 91.80 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 12 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

    தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. குண்டாறு அணையில் 6.20 மி.மீ., கடனாநதி அணையில் 3 மி.மீ., ராமநதி அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணை முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 171 கனஅடி நீர் வந்தது. 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 74.20 அடியாக இருந்தது.

    ராம நதி அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 78 அடியாக இருந்தது. கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 64.64 அடியாக இருந்தது. அடவி நயினார் அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 100 அடியாக இருந்தது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரமாக தொடர் மழை பெய்ததால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் நூற்றாண்டு விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் அழைப்பு

    July 23, 2025
    மாநிலம்

    வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சிகள் – மதுரை சொத்து வரி விவகாரத்தில் ஒதுங்கி நிற்கும் திமுகவுக்கு பின்னடைவு?

    July 23, 2025
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

    July 23, 2025
    மாநிலம்

    செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு

    July 23, 2025
    மாநிலம்

    “கொள்கை வேறு, கூட்டணி வேறு…” – அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு

    July 22, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ‘ஓடிபி’ தடையை விலக்கக் கோரி திமுக மனு

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
    • பிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் நூற்றாண்டு விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் அழைப்பு
    • ஒரு நாய்க்குட்டியை சமூகமயமாக்குவது எப்படி: நம்பிக்கையான கோரைகளுக்கான முழுமையான வழிகாட்டி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் 30-ல் விண்ணில் பாய்கிறது!
    • யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.