Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு’ – சி.பி.ராதாகிருஷ்ணன்
    மாநிலம்

    ‘ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு’ – சி.பி.ராதாகிருஷ்ணன்

    adminBy adminJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு’ – சி.பி.ராதாகிருஷ்ணன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: “ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்.” என மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீவிரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசம் வளர்ச்சி பெறும். அமைதி நிலவும். மத்திய அரசு அளித்து வரும் உதவியை பாராட்டுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநர் மிக நேர்மையானவர். அவருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

    டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக உள்ளது. அதை விட கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் வேறுபாடு காணப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதாக கூறியுள்ளது. தற்போது அதற்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது.

    ஒன்றிய அரசு என்று கூறுவதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் கூற வேண்டும். அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்.

    கமல் குறித்து ஒரு ஆளுநர் பதில் கூற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுக-வை ஒழிப்பது தான் என்னுடைய பணி என்று இயக்கத்தை தொடங்கினார். இன்று திமுக-வுடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நன்மை தரும் என கூறுகிறார்.

    சம்ஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என யாராவது கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா. பேசும் போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் திறன் கொண்டவர்களே பொது வாழ்க்கைக்கு தகுதியானவர்கள்.

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்

    June 29, 2025
    மாநிலம்

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    June 28, 2025
    மாநிலம்

    விபத்தில்லா நிலையை உருவாக்க வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    June 28, 2025
    மாநிலம்

    கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

    June 28, 2025
    மாநிலம்

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

    June 28, 2025
    மாநிலம்

    ”ஜூலை 1 முதல் 3.16% கட்டணம் உயர்த்த மின்வாரியம்  முடிவு” – அன்புமணி குற்றச்சாட்டு

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.