Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது – ராகுல் காந்தி
    தேசியம்

    பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது – ராகுல் காந்தி

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது – ராகுல் காந்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால் வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:

    “வீடுகளின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் வீடு வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கும்கூட எளிதல்ல. அவர்கள், தங்களின் ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை 109 ஆண்டுகளுக்கு சேமித்தால் மட்டுமே மும்பையில் வீடு வாங்க முடியும்.

    பெரிய நகரங்களில் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் தேடிக் கஷ்டப்பட்டு உழைக்கிற பெரும்பாலான மக்களின் நிலைமை இதுதான். நடுத்தர வர்க்கத்தினருக்கு இவ்வளவு சேமிப்பு எங்கிருந்து வரும்?

    ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மரபுரிமை என்பது செல்வம் அல்ல. மாறாக, குழந்தைகளுக்கான விலையுயர்ந்த கல்வி, விலையுயர்ந்த சிகிச்சை, பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது, குடும்பத்திற்கு ஒரு சிறிய கார் வாங்குவது என ஏராளமான பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளது.

    நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ஆனால் அந்த ‘ஒரு நாள்’ நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட 109 வருடங்களுக்குப் பிறகே வரும் எனும்போது, ஏழைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ​​ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு சுவர்களும் தலைக்கு மேல் ஒரு கூரையும் கொண்ட வசதியான ஒரு வீடு தேவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது உங்கள் வாழ்நாளின் கடின உழைப்பு மற்றும் சேமிப்பை விட அதிக செலவு கொண்டதாக உள்ளது.

    அடுத்த முறை யாராவது மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை உங்களிடம் கூறும்போது, ​​உங்கள் உள்நாட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்குக் காட்டுங்கள் – மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்று கேளுங்கள்?” . இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
    • உத்தரகண்ட் பயணம், உத்தரகண்ட் சுற்றுலா, உத்தரகண்டில் பார்வையிட வேண்டிய இடங்கள், உத்தரகண்டில் செய்ய வேண்டிய விஷயங்கள், உத்தரகண்டில் உள்ள மலை நிலையங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!
    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
    • உணவு லேபிள்களைப் படிப்பது போதாது! இந்த அன்றாட பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன; ஏன் என்று தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.