Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’!
    சினிமா

    ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’!

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒரு வருடம் ஓடிய ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழ் சினி​மா​வில் 80-களின் இறு​தி​யிலும் 90-களி​லும் டாப் ஹீரோ​வாக இருந்​தவர் ராம​ராஜன். ரஜினி, கமல் படங்​களுக்கே கடும் சவாலாக இருந்தன அவர், படங்​கள். கிராமத்து பேக்​ர​வுன்ட், காதல், மோதல், குடும்ப சென்​டிமென்ட், அற்​புத​மான பாடல்​கள்​… இது​தான் ராம​ராஜன் பட ஃபார்​முலா. இந்த அடிப்​படை​யில் வெளி​யான அவரின் பல படங்​கள் வெற்றி பெற்​றிருக்​கின்​றன. அதில் ஒன்​று, மக்​களைக் கொண்​டாட வைத்த, ‘கர​காட்​டக்காரன்’. மதுரை நடனா தியேட்​டரில் ஒரு வருடத்​துக்​கும் மேல் ஓடிய இந்​தப் படம் சில பகு​தி​களில் தொடர்ந்து ஹவுஸ்-புல் காட்​சிகளாக, 200 நாட்​களுக்கு மேல் ஓடியது.

    கங்கை அமரன் இயக்​கிய இந்​தப் படத்​தில் முத்​தையா என்ற கரகாட்​டக் கலைஞ​ராக, ரசிகர்​களின் மனதை அள்​ளி​யிருப்​பார் ராம​ராஜன். இதில்​தான், கனகா நாயகி​யாக அறி​முக​மா​னார். அவருக்​கும் காமாட்சி என்ற கரகாட்​டக்​காரி வேடம்​தான். கூடவே அத்தை மகனைக் காதலித்து சோகம் சுமக்​கும் கதா​பாத்​திரம். கவுண்​டமணி தவில், நாதஸ் செந்​தில், ஊர் பெரிய மனிதர் சின்​ன​ராசு​வாக சந்​தான​பார​தி, கனகா​வின் தந்​தை​யாக சண்​முகசுந்​தரம், ராம​ராஜனின் அம்​மா​வாக காந்​தி​ம​தி, சந்​திரசேகர், கோவை சரளா ஆகியோர் நடித்​திருந்​தனர்.

    கதை ரொம்ப சிம்​பிள். ‘தில்​லானா மோக​னாம்​பாளி’ன் இன்​னொரு வடிவம். அதில் நடனக் கலைஞ​ரான பத்​மினியை காதலிப்​பார் நாதஸ்வர வித்​வான் சிவாஜி கணேசன். இதில் இரண்டு கரகாட்​டக் கலைஞர்​கள் காதலிக்​கிறார்​கள். ஊர் மற்​றும் குடும்​பப் பிரச்​சினை​களை மீறி அவர்​கள் எப்​படி ஒன்று சேர்​கிறார்​கள் என்​பது படம்.

    ‘தில்​லானா மோக​னாம்​பாள்’ கதை​யின் இன்​ஸ்​பிரேஷன்​தான் இந்​தப் படத்​துக்கு காரணம் என்​ப​தைக் கங்கை அமரனே வெளிப்​படை​யாகச் சொல்லி இருக்​கிறார். இந்​தப் படத்​தில் கவுண்​டமணி – செந்​தி​லுக்​கான காமெடி காட்​சிகள் வரவேற்​பைப் பெற்​றன. குறிப்​பாக அந்த வாழைப்பழ காமெடி ‘கன்னா பின்​னா’ ஹிட். இது ஒரு மலை​யாளப் படத்​திலிருந்து சுட்​டது என்​கிறார்​கள்.

    ‘இந்​தி​யா​விலேயே, நம்ம வேல்​டுலயே கார் வச்​சிருக்​கிற கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி​தான்’, செந்​திலை அடிக்​கடி அடித்​து​விட்​டு, “அதை ஏன்ட்டா என்ன பார்த்து அப்​படி ஒரு கேள்வி கேட்​டே” என்று கவுன்​டர் அடிக்​கிற கவுண்​டரின் நடிப்​பும் அந்த கேள்விக்​கான பதில் பார்​வை​யாளர்​களுக்​குத் தெரி​யும்​போது வரு​கிற குபீர் சிரிப்​பும் படத்​தின் பிளஸ். திரு​விழா​வில் காணா​மல் போன குழந்தை போலவே பம்மி நிற்​கும் செந்​திலின் நடிப்​பும் அவர்​களுக்​கேற்ற ஜோடி​யாக கோவை சரளா​வின் எக்​ஸ்​பிரஷனும் இந்​தப் படத்​தின் ஹிட்​டுக்​கான காரணங்​களில் ஒன்​றாக அமைந்​தன.

    படத்​தின் வெற்​றிக்கு இன்​னொரு காரண​மாக அமைந்​தது, இளையாராஜா​வின் மனதை மயக்​கிய பாடல்​கள். ‘இந்த மான் உந்​தன் சொந்த மான்’ மற்​றும் ‘மாங்​கு​யிலே பூங்​கு​யிலே’ என்று மெலடி​யில் இழைந்​து, ‘குடகு மலை காற்​றில் வரும் பாட்​டுக் கேட்​கு​தா’ என சோகத்​தில் கரைந்​து, ‘மாரி​யம்​மா.. மாரி​யம்​மா…’, ‘முந்தி முந்தி வினாயகரே’, ‘ஊரு விட்டு ஊரு வந்​து’ என துள்​ளலிசைப் பாடல்​களை தந்த இளை​ய​ராஜா, டைட்​டிலில் ‘பாட்​டாலே புத்தி சொன்​னான்’ என்று தனது குரலில் ஆரம்​பிக்​கும் போதே படத்தின் மீது ஈர்ப்பு வந்​து​விடும் நமக்​கு. இந்த ஒரு பாடலை தவிர மற்ற பாடல்​களை கங்கை அமரன் எழுதி​னார். டைட்​டில் பாடலில், படத்​தில் பணிபுரிந்த அனைவரை​யும் அறி​முகப்​படுத்தி இருந்​தார் கங்கை அமரன்.

    இந்​தப் படத்​தில் கவுண்​டமணி பயன்​படுத்​தும் 1960-ம் ஆண்டு மாடலான செவர்லே இம்​பாலா கார், பட ரிலீஸுக்கு பிறகு அதி​கம் பிரபல​மானது. விஜயா மூவிஸ் சார்​பில் கரு​மாரி கந்​த​சாமி​யும் ஜே துரை​யும் தயாரித்​தனர். ஏ.ச​பாபதி ஒளிப்​ப​திவு செய்​தார். வெறும் 28 நாட்​களில் முடிக்​கப்​பட்ட படம் இது. 1989-ம் ஆண்டு இதே நாளில் வெளி​யான இந்த சூப்​பர்​ ஹிட்​ படம்​, ‘கர​காட்​ட கோபை​யா’ என்​ற பெயரில்​ டப்​ செய்​யப்​பட்​டு தெலுங்​கிலும்​ வெளி​யானது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    June 30, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

    June 30, 2025
    சினிமா

    புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’

    June 30, 2025
    சினிமா

    ‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?

    June 29, 2025
    சினிமா

    ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? – பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

    June 29, 2025
    சினிமா

    ‘சூர்யா 46’ கதைக்களம் என்ன? – இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படை

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.