Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு
    உலகம்

    உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உலகில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

    உலக மக்களின் மனநலம் இன்று, மனநலம் வரைபடம் 2024 ஆகிய தலைப்புகளில் உலக சுகாதார அமைப்பு 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய தரவுகள் குறித்த விவரம்: உலக அளவில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்கிறது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்று தற்கொலையாக மாறுகிறது.

    உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். பதற்றமும் மனச்சோர்வும் பொதுவமான மனநலக் கோளாறுகளாக உள்ளன. இவை, 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து மனநலக் கோளாறுகளிலும் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இருந்தன. மனநல பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    2011 முதல் மதிப்பிடப்பட்ட தரவுகளில் 20-29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநல பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கவனக்குறைவு, அதிக செயல்பாட்டுக் கோளாறு, ஆட்டிசம் கோளாறு, அறிவு வளர்ச்சியில் கோளாறு ஆகிய குறைபாடுகள் பொதுவாக ஆண்களுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதற்றம், மனச்சோர்வு, உணவுக் கோளாறு ஆகியவை பெண்களுக்கான பொதுவமான மனநலப் பிரச்சினையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    மனநலக்கோளாறுகளில் முதலில் பதற்றம் ஏற்படுகிறது. பின்னர் அது மனச்சோர்வாக மாறுகிறது. 40 வயதுக்குப் பிறகு பதற்றத்தைவிட மனச்சோர்வுதான் அதிகமாக காணப்படுகிறது. 50 வயது முதல் 59 வயது வரை அது உச்சத்தை அடைகிறது.

    அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூக – பொருளாதார சூழல்களிலும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக தற்கொலைதான் உள்ளது. தற்கொலை விகித்ததைக் குறைக்க உலக சுாதார அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள், தற்போதைய தற்கொலை விகிதத்தில் 3-ல் 1 பங்கை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை அடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் 12% மட்டுமே அடையமுடியும்.

    போதுமான நிதி, வலுவான தலைமைத்துவம், ஏற்கெனவே உள்ள திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளே தேவையாக இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

    September 2, 2025
    உலகம்

    “பெட்டியைப் படியுங்கள்…” எலோன் மஸ்க் கருத்தடை மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மீது அலாரத்தை எழுப்புகிறார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 2, 2025
    உலகம்

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின்

    September 2, 2025
    உலகம்

    பாஸ்டன் பிராமணர்கள் யார்? பீட்டர் நவரோவின் இந்தியா கருத்து சமூக ஊடக விவாதத்தைத் தூண்டுகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 2, 2025
    உலகம்

    லாரா இங்க்ராஹாம் யார்? எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்தியா குறித்த கருத்துகள் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் ட்ரோல் செய்யப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 2, 2025
    உலகம்

    அமெரிக்க – இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்.13-ல் பயணம்?
    • பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து
    • ஐஸ்லாந்தில் மட்டுமே நீங்கள் காணும் 6 தனித்துவமான விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது!” – ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.