Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
    உலகம்

    ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

    ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன.

    ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டிடங்​கள் நொறுங்​கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

    குழந்​தைகள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என ஏராள​மான மக்​கள் இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளனர். ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.47 மணி​யள​வில் முதல் நிலநடுக்​கம் 6.0 ரிக்​டர் அளவுக்கு ஏற்​பட்​டது. அதை தொடர்ந்து சில நிமிடங்​களில் 4.5 ரிக்​டர் அளவில் மீண்​டும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், 2,500-க்​கும் மேற்​பட்​டோர் கா​யம் அடைந்​துள்​ளனர்.

    ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கம் தொடர்​பான சிசிடிவி காட்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. நிலநடுக்​கத்​தில் பல கிராமங்​கள் இருந்த வீடு​கள், பல மாடி கட்​டிடங்​கள் மண்​ணோடு மண்​ணாக சரிந்​துள்​ளன. இடி​பாடு​களில் ஏராள​மானோர் சிக்​கி​யிருக்​கலாம். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது.

    பாதிக்​கப்​பட்ட இடங்​களில் மீட்​புப் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. பல கிராமங்​கள் முற்​றி​லும் சேதமடைந்​துள்​ளன. அதனால் உயி​ரிழந்​தோர் மற்​றும் காயம் அடைந்​தவர்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்​டுள்​ளது. குணார், நங்​கார்​ஹர், தலைநகர் காபூல் போன்ற நகரங்​களில் இருந்து மருத்​து​வக் குழு​வினர் சென்​றுள்​ளனர் என்று பொது சுகா​தா​ரத் துறை அமைச்சக செய்​தித் தொடர்​பாளர் ஷராபத் ஸமான் கூறி​னார். ஆப்​கானிஸ்​தான் வரலாற்​றில் இந்த நிலநடுக்​கம் மிக மோச​மானது என்று கூறுகின்​றனர்.

    பிரதமர் மோடி இரங்​கல்: ஆப்​கானிஸ்​தானில் நிலநடுக்​கம் ஏற்​பட்​டதை அறிந்து பிரதமர் மோடி மிகுந்த வேதனை தெரி​வித்​தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஆப்​கன் நிலநடுக்​கத்​தில் ஏராள​மானோர் உயி​ரிழந்​ததை அறிந்து மிக​வும் சோகம் அடைந்​தேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு இந்த நேரத்​தில் உறு​துணை​யாக இருப்​போம். அவர்​களுக்​காகப் பிரார்த்​தனை செய்​கிறோம். கா​யம் அடைந்​தவர்​கள் விரைந்து குணமடைய பிரார்த்​திக்​கிறேன். பா​திக்​கப்​பட்ட மக்​களுக்கு தேவை​யான அனைத்து மனி​தாபி​மான உதவி​களை​யும் இந்​தி​யா செய்​வதற்​கு தயா​ராக உள்​ளது” என்​று கூறியுள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    அமெரிக்க – இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்

    September 2, 2025
    உலகம்

    பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?

    September 2, 2025
    உலகம்

    சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

    September 2, 2025
    உலகம்

    சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை

    September 2, 2025
    உலகம்

    23 வயதான இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி தக்ஷ் குப்தா யார், அவரது 9-9-6 விதி ஏன் வைரலாகி வருகிறது? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 1, 2025
    உலகம்

    இந்தியாவுக்கு வரி குறைப்பு சாத்தியமா? – ட்ரம்ப் புதிய கருத்து

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் யூரிக் அமிலம் மாரடைப்பைத் தூண்டக்கூடும்: அறிகுறிகள், அபாயங்கள் மற்றும் தடுப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 18 வயதில் ஹரியாணாவுக்கு ஆடவில்லை எனில் அமெரிக்கா சென்றிருப்பேன் – ஹர்ஷல் படேல்
    • நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் டிஜி தியாகராஜன்
    • சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
    • ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம்: 48 நிறுவனங்களுடன் இந்​தியா முதலிடம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.