சென்னை: மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை…
Author: admin
இன்றைய வேகமான வேலையில், இருதய ஆரோக்கியம் பெரும்பாலும் பின்சீட்டை எடுக்கும்; காரணம் வசதி. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் மற்றும் மன அழுத்தம் அனைத்தும் இருதய நோய்களின் அதிகரிப்புக்கு பங்களித்தன, அவை அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும், 2019 இல் 17.9 மில்லியன் இறப்புகள் (WHO). இது அந்த ஆண்டின் அனைத்து உலகளாவிய இறப்புகளில் 32% ஐ குறிக்கிறது. குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இந்த இறப்புகளில் 85% ஆகும்.ஆடம்பரமான உணவுகள், குறைந்த கார்ப் உணவு மற்றும் மருந்துகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கும் அதே வேளையில், உண்மை என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறை தேர்வுகள் நீங்கள் நினைப்பதை விட மிகப் பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. (ஆதாரம்: ஹெல்த்லைன், என்ஐஎச்.ஜோவ்,)நவீன மருத்துவத்தை நம்புவதில் நீங்கள் பெரியவராக இருந்தால், இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கானவை;…
திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் இடைநிலைத் தொழிலாளி சாந்தகுமார். பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், மனைவியின் வசை, வீட்டு உரிமையாளர் போலீஸில் கொடுக்கும் புகார் உள்பட பல அழுத்தங்கள் அவரைத் தாக்குகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க, மதுவை நாடும் அவர், நிலைகொள்ளாத போதையில் செய்யும் செயல்கள், அவரின் அன்றைய இரவில் பல எதிர் விளைவுகளைக் கொண்டு வருகின்றன. அந்த இரவு முடியும்போது அவர் என்னவாகிறார் என்பது கதை. கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். கதை சொல்லலில், நம்பகமான காட்சிகளுடன் கூடிய தேர்ச்சிமிக்க திரைக்கதை உத்திகளும், ஒளிப்பதிவில் இரவில் விழித்திருக்கும் திருப்பூர் நகரத்தின் உள்ளோடிய முகமும், இசையில் தன்னிலை உணரும் ஒருவனின் விடுதலைக்கான ஏக்கமும் இயல்பாக இருப்பதால், ஒரு யதார்த்த சினிமாவாக இப்படம் உயர்ந்துவிடுகிறது. அறை நண்பனிடம், முதலாளியிடம், மேலாளரிடம், மனைவியிடம்,…
புதுச்சேரி: கட்சி பிளவைத் தடுக்க அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பட்டியலின அமைச்சரின் ஆதரவாளர்கள், அமைப்புகளால் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் என்ஆர். காங்கிரசுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத்தலைவர், 2 அமைச்சர்கள் தரப்பட்டன.மத்திய அரசு நேரடியாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது. ஆட்சியில் இடம் பெற்றதால் பாஜக வளர்ச்சி பெறும் என கட்சி தலைமை கருதியது. ஆனால் எதிர்மறையாக புதுவை பாஜகவில் கோஷ்டிகள் உருவானது. ஆட்சி அமைந்த நாள் முதலே அமைச்சரவையில் இடம்பெறாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய பதவி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினர். போராட்டங்களும் நடத்தினர். சுழற்சி…
நீங்கள் ஒரு நேர்காணலுக்குச் செல்லும்போது, நிறுவனம், அவர்களின் பணி கலாச்சாரம் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் பற்றி முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நேர்காணலுக்கு தயாராக இல்லாமல் செல்வது நீங்கள் சுயவிவரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தோன்றலாம், இது உங்களுக்கு எதிராக செல்லலாம்.அதற்கு பதிலாக: நிறுவனத்தின் வலைத்தளமான சமூக ஊடக பக்கங்கள், அவர்களின் சமீபத்திய செய்தி கட்டுரைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். எந்தவொரு பெரிய திட்டங்களையும் அல்லது நிறுவனத்தில் தலைமை மாற்றங்களையும் கவனியுங்கள். இது நிறுவனம் மற்றும் உங்கள் புதிய பாத்திரத்தைப் பற்றி உண்மையான உற்சாகமாக தோன்றும்.
புதுடெல்லி: புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கடந்த ஜூன் 23 அன்று மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பின்படி, ‘புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இருசக்கர வாகன உற்பத்தியாளர் இந்திய தரநிலைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்துடன் 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும். வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) நிர்ணயித்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களுக்கு இந்தத் தேவை பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1,…
அடுத்து ஒரு படம் இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகியிருக்கிறார்கள். ஆனால், பிரதீப் ரங்கநாதன் தரப்போ அடுத்து படம் ஒன்று இயக்கி நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு தான் நாயகனாக நடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள். சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஆக்ஷன் கதை ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
சென்னை: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும், வட்டார ஊராட்சிக்கான அனுமதி…
பெற்றோருக்கு வரும்போது, எந்த அளவும் பொருந்தாது. பெற்றோர்கள், முற்றிலும் நல்ல அர்த்தமுள்ளதாக இருக்கும்போது, சில சமயங்களில் தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீவிர நீளத்திற்குச் செல்கிறார்கள், கூச்சலிடுதல், அலறல் மற்றும் அவ்வப்போது வன்முறை ஆகியவற்றைக் கூட நாடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த முறைகள் எப்போதுமே செயல்படாது, ஏனென்றால் குழந்தைகளுக்கு ஒழுங்குபடுத்த பொறுமை, சரியான நோக்கம், நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை மற்றும் இரு கூட்டாளர்களின் பங்களிப்பு தேவை. ஒழுக்கத்திற்கு வரும்போது, பெற்றோர்கள் பயன்படுத்தும் பல நுட்பங்கள் உள்ளன, அவற்றில் “நல்ல காப், பேட் காப்” நுட்பம் மிகவும் பிரபலமானது. இந்த நுட்பம் ஒரு பெற்றோர் கண்டிப்பாக இருப்பதன் மூலம் “மோசமான காவல்துறை” பாத்திரத்தை வகிக்கிறது, மற்றொன்று “நல்ல போலீஸ்காரரை” விளையாடுகிறது, ஓரளவு மென்மையாக இருப்பதன் மூலமும், கடன் வழங்கும் ஆண்டை வழங்குவதன் மூலமும். ஆனால் நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளை வளர்க்கும் போது இந்த முறை உண்மையில் செயல்படுகிறதா? ஆழமாக ஆராய்வோம் …இந்த நுட்பம் என்னநல்ல…
ஓடிடியில் ஜூலை 4-ம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் பலரும், இப்படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை விட, ஓடிடி தளத்தில் மேலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.