Author: admin

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு இது… பல நூற்றாண்டுகள் பழமையான கோட்பாட்டை மாற்றியமைக்காமல், மிகவும் இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக போப் பிரான்சிஸ் வரலாற்றில் இடம் பிடிப்பார். மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார். திருச்சபைக்குள் பாரம்பரியவாதிகளிடம் இருந்து…

Read More

மூலவர்: பூமிநாதர் அம்பாள்: ஆரணவல்லி தல வரலாறு: முதல் யுகமான கிருதயுகத்தில், பூமிபாரத்தை தாங்க முடியாமல் பூமாதேவி, எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும்சக்தியை தனக்கு அதிகரித்துதர வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி கடும் தவமிருந்தாள், அவள் முன் தோன்றிய சிவபெருமான், “திரேதாயுகம், துவாபரயுகத்தில் பூமியை தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது. உன்னை பூஜிக்கும் நல்ல பக்தனால் இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை” என சொல்லி மறைந்தார். நல்ல பக்தர்களைத் தேடும் சமயத்தில் செல்லும் இடங்களில் உள்ள சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். பூமாதேவி பிரார்த்தித்த மூர்த்திகள் பூமிநாதர், பூலோகநாதர் என்று அழைக்கப்பட்டனர். அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும். கோயில் சிறப்பு: கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள பிருத்வி தீர்த்தத்தின் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம்…

Read More

“தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள்” என்று ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். மே 1-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, “‘ரெட்ரோ’ பார்த்துவிட்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும். உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன். இரண்டரை மணி நேரம் நீங்கள் திரையரங்கு வந்தால் உங்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வேன்” என்று தெரிவித்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து பேச்சை முடிக்கும் முன்பு, “இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று பேசினார்…

Read More

சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஏப்.28) நடைபெற உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி,…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில், பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு, பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில், “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற ‘போராளி தாக்குதலை’ தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ள மத்திய அரசு, பிபிசியின் செய்தி அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும்…

Read More

Last Updated : 04 Mar, 2025 12:20 PM Published : 04 Mar 2025 12:20 PM Last Updated : 04 Mar 2025 12:20 PM சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனுடன் கேலக்சி ஏ36 மற்றும் ஏ26 போனையும் சாம்சங்…

Read More

சென்னை / தருமபுரி: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சென்னையில் ஆடிட்டர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள். இவர்களில் மூத்த மகன் சிவச்சந்திரன் (28) சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து சி.ஏ தேர்விலும் வெற்றி பெற்றார். இருப்பினும் காவல் துறையில் பணியாற்றும் விருப்பத்துடன் இந்திய குடிமைப் பணி தேர்வுக்காக சில ஆண்டுகளாக படித்து வந்தார். 4 முறை இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டபோதும் நடப்பு ஆண்டில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது வெளியான குடிமைப் பணி தேர்வு முடிவுகளின்படி சிவச்சந்திரன் இந்திய அளவில் 23-வது இடத்திலும், தமிழக அளவில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த…

Read More

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்​து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் விளக்​கமளித்​திருந்​தார். இதற்​கிடையே கடந்த செவ்​வாய்​கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் உள்ள சுற்​றுலாதலத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு தாக்​குதலில் 2 வெளி​நாட்​டினர் உட்பட 26 பேர் கொல்​லப்​பட்​டனர். இது நாடு முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. இத்​தகைய சூழலில் பாகிஸ்​தான் வீரருக்கு…

Read More

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலமானார். மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர். போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும், தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து, அந்தச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார். போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16…

Read More

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது. விழாவில், கடந்த 10-ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தியும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை சார்த்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு சைவ வேளாளர்கள் சங்கத்தில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.…

Read More