Author: admin

தஞ்​சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் கோயில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாவட்ட நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், கோயில் கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று முதல் மே 10-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும். பிரதான நிகழ்ச்சி எண் திசை கொடியேற்றம் மே 1-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் காலை 11.45 மணிக்குள் நடைபெறும். மே 2-ம் தேதி சந்திரசேகரர் முத்து பல்லக்கில் புறப்பாடு, மே 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளல், அன்று காலை 5.30 மணிக்கு மேல் காலை 6.30 மணிக்குள் தேரோட்டம், மே…

Read More

கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் டிவி, செல்போனில் அதிகமான நேரத்தை செலவிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. எனவே, இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும்…

Read More

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் புல்வெளியில் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ குழுவினர் புதன்கிழமை முதல் முகாமிட்டு தாக்குதலுக்கான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி மேற்பார்வையிலான குழு அமைதியான மற்றும் அழகிய பைசரன் புல்வெளியில் கண்கள் முன்னே தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றன. காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவங்களை ஒரு வரிசையில்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வி50 போனை விவோ அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 882 சென்சார் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள…

Read More

சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத் தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். நமது நோக்கம் பாகிஸ்தானோடு இந்தியா ஒரு ராணுவ முஸ்தீப்பை அல்லது ராணுவ நடவடிக்கையைக் காட்ட வேண்டும் என்பது அல்ல. ஒரு போர் என்பது எவ்வளவு பெரிய பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும்; அதே போல உயிரிழப்புகளை உருவாக்கும் என்பது தெரியும்.…

Read More

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே இயக்குநர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் என அனைவரும் பேசினார்கள். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். இறுதியாக “கடைசியாக ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அகிலா இளங்கோவன். 6-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து உன்னை தெரியும். 10-ம் வகுப்பில் இருவரும் நட்பாக இருக்கிறோம். இந்த இடத்தில் உன்னிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு ஒன்று கேட்க வேண்டும் என தோன்றுகிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதி என்னை திருமணம் செய்து…

Read More

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்தது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர். பிரியான்ஷ் ஆர்யா, 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட் செய்ய வந்தார். பிரப்சிம்ரன் சிங், 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 7, யான்சன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி 4 ஓவர்களில் வெறும் 34 ரன்களை மட்டுமே…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், “சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார். சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து,…

Read More

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு 18 நாள் சித்திரை தீருவிழா வருகின்ற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 3-ம் தேதி தர்மர் பிறப்பு, 7-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள்…

Read More

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த 2024-2025-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த நீடித்த வளர்ச்சி வாயிலாக. 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை நம்மால் எளிதாக எட்ட முடியும். மேலும், சேவைத் துறையின் வளர்ச்சி…

Read More