சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வந்தார். இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினையும் 2 முறை சந்தித்து பேசினார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூலமாக, ஓபிஎஸ் சந்திப்பை நிகழ்த்தி அவரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக யாரும் இனி பொது வெளியில் பேசவோ, சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிடவோ கூடாது என்றும், விமர்சிக்கவும் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
Author: admin
புதுடெல்லி: தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா, 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்தார். அப்போது நர்மதை பாதுகாப்பு இயக்கத்துக்கு அவர் அளித்த காசோலை, வங்கியில் கணக்கு இல்லாததால் திரும்பி விட்டதாக அதன் தலைவர் மேதா பட்கர் குற்றம் சாட்டினார். மேலும் சக்சேனாவை கோழை, தேசபக்தியற்றவர், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார் என மேதா பட்கர் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக வி.கே.சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு விசாரணை நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்தது. எனினும் சிறை தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான தகுதி காணுதல் அடிப்படையில் அவரை ஓராண்டில் விடுவிக்க கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதை டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது.இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோடீஸ்வர் சிங் அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது. இதில் டெல்லி உயர் நீதிமன்ற…
சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தான் அளித்த புகாரை போலீஸார் நிராகரித்து விட்டதாக பாஜக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த ஏப்ரலில் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுகாரணமாக அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது, பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராகப் பெறப்பட்ட 115 புகார்களில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன என்றும், 40 புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து தபால் மூலமாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், 4 புகார்கள் ஆன்லைன் மூலமாக முடித்து வைக்கப்பட்டது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புகை பெறப்பட்டது குறித்து…
சென்னை: மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். “ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஒரு அணியில் உள்ள வீரர், தன்னை தக்க வைக்கலாமா அல்லது விடுவிக்கலாமா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் அது குறித்து தெளிவு படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் எதுவும் என் கையில் இல்லை. நான் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன். நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகின்றோம் என யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதை நாங்கள் சொல்லவில்லை. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடி உள்ளேன். முதல் சீசன் முடிந்ததும் அந்த அணியின் சிஇஓ எனக்கு…
சென்னை: வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு 40 ஆண்டுகளாக தமிழ் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததை நிறுத்திவைப்பது கண்டனத்துக்குறியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப்பாடநூல்களை இலவசமாக விநியோகித்து வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்திவைத்திருப்பது கண்டனத்துக்குரியது. அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் அவதியுற்று வரும் வேளையில், அவர்களின் மீது மேலும் நிதிச்சுமையை ஏற்றுவது நியாயமா? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அயல் மாநிலங்களில் தமிழ் படிக்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்கள் தான் என்பது தெரியாதா, இதுதான் தமிழ் வளர்ச்சியில் திராவிட மாடல் கொண்டுள்ள அக்கறையா, கோபாலபுரம் தலைமுறையினரின் பகட்டு செலவுகளான பேனா சிலை, கார் ரேஸ், பிரச்சார நடனம், விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு நிதியை அள்ளித் தெளிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்களுக்கு வெளிமாநிலங்களில்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியில் உள்ள கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த திட்டத்தின்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது ரூ.10 கூடுதலாக விற்க வேண்டும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும். தற்போது பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி மற்றும்…
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் ரிகைச,. சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பி.பிரணவுடன் மோதினார். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் மோதி ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன்…
சென்னை: வெற்றி, தோல்வியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும், தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் ஒற்றையாக நின்று 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்லையா, இந்திய அளவில் நான் ஆட்டத்திலேயே இல்லை. ஆனால் என்னையும் தேடி வாக்கு செலுத்தி, என்னை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியுள்ளனர். தேர்தலில் 1.1 வாக்கு சதவீதத்தில் இருந்து 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது என் வளர்ச்சியாகும். இதுபோன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்தில் கிடையாது. தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு…
நீல மண்டல குடியிருப்பாளர்களின் உணவு முக்கியமாக காய்கறிகள், பீன்ஸ், கொட்டைகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்படாத தாவர அடிப்படையிலான உணவுகளைக் கொண்டுள்ளது. இந்த சமூகங்களில் உள்ளவர்கள் அவ்வப்போது உணவு தேர்வாகவும், பெரும்பாலும் குளிர்காலத்திலும் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். நீல மண்டல குடியிருப்பாளர்கள் உள்ளூர் மூலங்களிலிருந்து பெறும் புதிய பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள், மேலும் அவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தவிர்க்கிறார்கள்.இந்த உணவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் போதுமான அளவு நார்ச்சத்தை வழங்குகிறது, இது வீக்கத்தை எதிர்த்துப் போராடும் போது இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவை உருவாக்குகிறது, இது மக்கள் மேம்பட்ட ஆண்டுகளில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரு தாவர அடிப்படையிலான உணவு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உயர் விலங்கு கொழுப்பு உணவுகளில் உள்ள ஆபத்தான…
மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்டம் வெல்ல முடியாததற்கான தடைகளை உடைக்க நாங்கள் விரும்புகிறோம். அனைத்து இந்தியர்களும் இதற்காக காத்திருக்கின்றனர். உலகக் கோப்பைகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை, என் நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். யுவராஜ் சிங்கை பார்க்கும் போதெல்லாம் அது எனக்கு நிறைய உந்துதலைத்…