Author: admin

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை விமர்​சிக்க கூடாது என நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவு பிறப்பித்துள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொடர்ச்​சி​யாக ஓபிஎஸ் ஓரம் கட்​டப்​பட்டு வந்தார். இதனால், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓபிஎஸ் அறி​வித்​தார். முதல்​வர் ஸ்டா​லினையும் 2 முறை சந்​தித்து பேசினார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூல​மாக, ஓபிஎஸ் சந்​திப்பை நிகழ்த்தி அவரை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக தலைமை திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே, அவருக்கு எதி​ராக யாரும் இனி பொது வெளி​யில் பேசவோ, சமூக வலை​தளத்​தில் கருத்​துக்​களை பதி​விடவோ கூடாது என்​றும், விமர்​சிக்​க​வும் கூடாது என்​றும் நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவிட்டுள்ளது.

Read More

புதுடெல்லி: தற்​போது டெல்லி துணை நிலை ஆளுந​ராக இருக்​கும் வி.கே.சக்​சே​னா, 25 ஆண்​டு​களுக்கு முன் குஜ​ராத்​தில் அரசு சாரா அமைப்பு ஒன்​றின் தலை​வ​ராக இருந்​தார். அப்​போது நர்​மதை பாது​காப்பு இயக்​கத்​துக்கு அவர் அளித்த காசோலை, வங்​கி​யில் கணக்கு இல்​லா​ததால் திரும்பி விட்​ட​தாக அதன் தலை​வர் மேதா பட்​கர் குற்​றம் சாட்​டி​னார். மேலும் சக்​சே​னாவை கோழை, தேசபக்​தி​யற்​றவர், ஹவாலா பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​படு​கிறார் என மேதா பட்​கர் விமர்​சனம் செய்​தார். இது தொடர்​பாக வி.கே.சக்​சேனா தொடர்ந்த அவதூறு வழக்​கில் மேதா பட்​கருக்கு விசா​ரணை நீதி​மன்​றம் 5 மாத சிறை தண்​டனை விதித்​தது. எனினும் சிறை தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான தகுதி காணுதல் அடிப்படையில் அவரை ஓராண்டில் விடுவிக்க கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதை டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது.இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​.கோடீஸ்​வர் சிங் அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது. இதில் டெல்லி உயர் நீதி​மன்ற…

Read More

சென்னை: சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தான் அளித்த புகாரை போலீ​ஸார் நிராகரித்து விட்​ட​தாக பாஜக வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார். முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, கடந்த ஏப்​ரலில் சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இந்த பேச்சுகாரண​மாக அவரது அமைச்​சர் பதவி​யும் பறி​போனது. உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்​தது. இந்​நிலை​யில் இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது, பொன்​முடி​யின் சர்ச்சை பேச்சு தொடர்​பாக அவருக்கு எதி​ராகப் பெறப்​பட்ட 115 புகார்​களில் 71 புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்டுவிட்டன என்​றும், 40 புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டது குறித்து தபால் மூலமாக தகவல் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது என்​றும், 4 புகார்​கள் ஆன்​லைன் மூல​மாக முடித்து வைக்​கப்​பட்​டது என்​றும் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து பொன்​முடிக்கு எதி​ரான புகார்​கள் முடித்து வைக்​கப்​பட்​டது குறித்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​களிடம் ஒப்​புகை பெறப்பட்டது குறித்து…

Read More

சென்னை: மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். “ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஒரு அணியில் உள்ள வீரர், தன்னை தக்க வைக்கலாமா அல்லது விடுவிக்கலாமா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் அது குறித்து தெளிவு படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் எதுவும் என் கையில் இல்லை. நான் அது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன். நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகின்றோம் என யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதை நாங்கள் சொல்லவில்லை. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடி உள்ளேன். முதல் சீசன் முடிந்ததும் அந்த அணியின் சிஇஓ எனக்கு…

Read More

சென்னை: வெளி​மாநில தமிழ் சங்​கங்​களுக்கு 40 ஆண்​டு​களாக தமிழ் பாடநூல்​கள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​ததை நிறுத்திவைப்​பது கண்​டனத்​துக்​குறியது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: வெளி​மாநில தமிழ்ச்​சங்​கங்​களுக்கு சுமார் நாற்​பது ஆண்​டு​களாக தமிழ்ப்பாடநூல்களை இலவச​மாக விநி​யோகித்து வந்த திட்​டத்தை நிதி நெருக்​கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்​தி​வைத்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது. அயல் மாநிலங்​களில் உள்ள தமிழ்ச்​சங்​கங்​கள் ஏற்​க​னவே நிதிப்​பற்​றாக்​குறை​யால் அவதி​யுற்று வரும் வேளை​யில், அவர்​களின் மீது மேலும் நிதிச்​சுமையை ஏற்​று​வது நியாய​மா? இதனால் அதி​கம் பாதிக்​கப்​படு​வது அயல் மாநிலங்​களில் தமிழ் படிக்​கும் ஏழை எளிய தமிழ் வம்​சாவளி மாணவர்​கள் தான் என்​பது தெரி​யா​தா, இது​தான் தமிழ் வளர்ச்​சி​யில் திரா​விட மாடல் கொண்​டுள்ள அக்​கறை​யா, கோபாலபுரம் தலை​முறை​யினரின் பகட்டு செல​வு​களான பேனா சிலை, கார் ரேஸ், பிரச்​சார நடனம், விளம்​பரங்​கள் ஆகியவற்றுக்கு நிதியை அள்​ளித் தெளிக்​கும் முதல்​வர் மு.க. ஸ்டா​லின் கண்​களுக்கு வெளி​மாநிலங்​களில்…

Read More

சென்னை: தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டம் நவம்​பர் மாதத்​துக்​குள் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், இயற்கை சூழலுக்​கும், வனவிலங்​கு​களுக்​கும் ஏற்​படும் பாதிப்பை போக்க, காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைதொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யில் உள்ள கடைகளில் காலி மது​பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யது. மேலும் இந்த திட்​டத்தை தமிழ்​நாடு முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. இந்த திட்​டத்​தின்​படி விற்​பனை செய்​யப்​படும் மது​பாட்​டில்​கள் மீது ரூ.10 கூடு​தலாக விற்க வேண்​டும். இதையடுத்து வாடிக்கையாளர்​கள் காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்​களிடம் திருப்பி கொடுக்க வேண்​டும். தற்​போது பெரம்​பலூர், அரியலூர், நீல​கிரி, கோவை, நாகை, திரு​வாரூர், தர்​மபுரி, தேனி மற்​றும்…

Read More

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் ரிகைச,. சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பி.பிரணவுடன் மோதினார். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், அமெரிக்​கா​வின் அவாண்​டர் லியாங்​குடன் மோதி ஆட்​டம் 29-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ரே ராப்​சனுடன்…

Read More

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீதி​மன்​றம், தேர்​தல் ஆணை​யம், வரு​மான வரித்​துறை, அமலாக்​கத்​துறை, சிபிஐ, என்ஐஏ போன்​றவை எல்​லாம் தன்​னாட்சி அமைப்​பு​கள் என்று நம்​பிக்​கொண்​டிருக்​கிறோம். ஆனால் இவை அதி​காரத்​தில் இருப்​பவர்​களின் 5 விரல்​களாக மட்​டுமே செயல்​பட்டு வரு​கின்​றன. கடந்த நாடாளு​மன்ற தேர்​தலில் நான் ஒற்​றை​யாக நின்று 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருக்​கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்​லை​யா, இந்​தி​ய அள​வில் நான் ஆட்​டத்​திலேயே இல்​லை. ஆனால் என்​னை​யும் தேடி வாக்கு செலுத்​தி, என்னை அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக மாற்​றி​யுள்​ளனர். தேர்​தலில் 1.1 வாக்கு சதவீதத்​தில் இருந்து 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பது என் வளர்ச்​சி​யாகும். இது​போன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்​தில் கிடை​யாது. தவெக தலை​வர் விஜய் அரசி​யலுக்கு…

Read More

நீல மண்டல குடியிருப்பாளர்களின் உணவு முக்கியமாக காய்கறிகள், பீன்ஸ், கொட்டைகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்படாத தாவர அடிப்படையிலான உணவுகளைக் கொண்டுள்ளது. இந்த சமூகங்களில் உள்ளவர்கள் அவ்வப்போது உணவு தேர்வாகவும், பெரும்பாலும் குளிர்காலத்திலும் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். நீல மண்டல குடியிருப்பாளர்கள் உள்ளூர் மூலங்களிலிருந்து பெறும் புதிய பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள், மேலும் அவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தவிர்க்கிறார்கள்.இந்த உணவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் போதுமான அளவு நார்ச்சத்தை வழங்குகிறது, இது வீக்கத்தை எதிர்த்துப் போராடும் போது இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவை உருவாக்குகிறது, இது மக்கள் மேம்பட்ட ஆண்டுகளில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரு தாவர அடிப்படையிலான உணவு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உயர் விலங்கு கொழுப்பு உணவுகளில் உள்ள ஆபத்தான…

Read More

மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்​டம் வெல்ல முடி​யாததற்​கான தடைகளை உடைக்க நாங்​கள் விரும்​பு​கிறோம். அனைத்து இந்​தி​யர்​களும் இதற்​காக காத்​திருக்​கின்​றனர். உலகக் கோப்​பைகள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, என் நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். யுவ​ராஜ் சிங்கை பார்க்​கும் போதெல்​லாம் அது எனக்கு நிறைய உந்​துதலைத்…

Read More