Author: admin

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. சிஎஸ்​கேவுக்கு இது 9-வது ஆட்​டத்​தில் 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு மிக​வும் மங்கி உள்​ளது. இந்​நிலை​யில், ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஸ்டீபன் பிளெமிங் கூறிய​தாவது: இந்த சீசனில் நாங்​கள் வெளிப்​படுத்​திய திற​னால் ஏலத்​தில் முழு​மை​யாக சரி​யானவற்றை பெற்​றோம் என்​பது சொல்​வது கடினம். மற்ற அணி​கள் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளன, அது​தான் ஏலத்​தின் புள்​ளி. ஆனால் எங்​களால் அதை சரி​யாக செய்ய முடிய​வில்​லை. ஏலம் என்​பது முழு​மை​யான அறி​வியல் இல்​லை. ஏலம் மிரு​கம் போன்ற பாய்ச்​சல் கொண்​டது. 25 மணி நேரத்​துக்​குள் வீரர்​களை வாங்​கு​கிறோம். அதன் முடி​வில் மனரீ​தி​யாக​வும், சில நேரங்​களில் உடல் ரீதி​யாக​வும் சோர்​வடைவதை பார்க்க முடி​யும்.…

Read More

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்று சமுத்திரக்கனி புகழாரம் சூட்டியிருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே பல்வேறு இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்த நூற்றாண்டில் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படம் பார்த்தவுடன் அவ்வளவு கனமாக இருந்தது, பெருமையாகவும் இருந்தது. இப்படம் பார்த்தவுடன் சசிகுமாரை கையெடுத்து கும்பிட வேண்டும் என தோன்றியது. இப்படியொரு படம் இதுவரை யாரும் எடுத்ததில்லை. உலகத்தில் இருக்கும் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும். சசிகுமாருக்கு ‘சுப்பிரமணியபுரம்’, எனக்கு ‘நாடோடிகள்’ போல் அபிஷனுக்கு ‘டூரிஸ்ட்…

Read More

லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130…

Read More

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ரெங்கா.. கோவிந்தா..” என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேர், பங்குனித் தேர், சித்திரைத் தேர் என மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெறும். இத்திருவிழாக்களில் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தேர் திருவிழா, பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்கும் விழாவாக விளங்குகிறது. நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.18 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினந்தோறும் நம்பெருமாள் தங்கக் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் இன்று காலை வெகு…

Read More

நீட் தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க, என்டிஏ இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ (NEET) தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

Read More

புதுச்சேரி: பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ சிலை திறப்பு நிகழ்வு நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிலையை திறந்து வைத்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தின் வேங்கை வயல், கள்ளக்குறிச்சி, மேல்பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதற்கெல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே? திமுகவோடு நாம் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள். நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக-அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடும் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் 2 அணியிலும் பேசும் ராஜதந்திரம் நமக்குத் தெரியாது. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘K’ சீரிஸ் போன்களின் வரிசையில் ‘கே13’ வெளிவந்துள்ளது. வெட் டச் (Wet Touch) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். 24-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. சிறப்பு அம்சங்கள்: 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன்…

Read More

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார். இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.இதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி…

Read More

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒருபோதும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் மீதான நம்பிக்கையை இழந்ததில்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி உடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை 5-வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணியும் ரன் ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது. “ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு சமயங்களில் சரிவு இருக்கும். அது மாதிரியான நேரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படும். இப்போது ரோஹித் சிறப்பாக ஆடி ரன் சேர்க்கிறார். இதன் மூலம் எங்கள் அணி மகிழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல ஹர்திக் பாண்டியாவும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறார்.…

Read More

தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது என்று ‘அகமொழி விழிகள்’ விழாவில் கே.ராஜன் பேசினார். சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘அகமொழி விழிகள்’. மே 9-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை சசீந்திரா கே.சங்கர் இயக்கி இருக்கிறார். இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள் சிலரும் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கே.ராஜன் பேசும்போது, “கேரளா நண்பர்கள் இந்தப் பட விழாவுக்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத்தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். ட்ரெய்லர், மூன்று பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துகள். இந்த வருடம் வெறும் 4 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. போன வருடம் 220 படங்களில் 8 படங்கள் தான் வெற்றி. சின்ன படங்களில் 15…

Read More